அடுத்த வருடம் விளையாடுவாரா தோனி?

  • IndiaGlitz, [Tuesday,May 30 2023]

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதனை அடுத்து கோப்பையைப் பெற்றுக் கொடுத்தவுடன் தல தோனி ஓய்வு பெற்றுக் கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறையில் 15 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து 15வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஜடேஜா வெற்றியை தேடி தந்தார்.

இந்த நிலையில் வெற்றிக்கு பின் தோனி பேட்டி அளித்தபோது, ‘என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம் என்றாலும் எல்லா இடங்களிலிருந்தும் எனக்கு அளவுகடந்த அன்பு கிடைத்து வருகிறது. நான் இங்கிருந்து கிளம்பி விடுவது எளிதானது, ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால் 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் போட்டியை விளையாட முயற்சிப்பது தான் என்று கூறினார்.

சென்னை ரசிகர்கள் தங்கள் அன்பையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துவதற்காக நான் அவர்களுக்கு இன்னும் செய்ய வேண்டியது உள்ளது என்று அவர் குறிப்பிட்டார், சென்னை ரசிகர்களின் அன்பு எனக்கு கிடைக்கும் ஒரு பரிசாக இருக்கும் ஆனால் அதே நேரத்தில் என்னுடைய உடலுக்கு எளிதாக இருக்காது என்றும் அவர் கூறுகிறார்.

இதையடுத்து அவர் இந்த ஆண்டுடன் ஓய்வு இல்லை என்பதை சூசகமாக அறிவித்துள்ள நிலையில் அடுத்த ஆண்டும் தல தோனி களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.