தீபக் சஹாருக்கு கையெழுத்து போட மறுத்த தோனி.. என்ன காரணமாக இருக்கும்?

  • IndiaGlitz, [Tuesday,May 30 2023]

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து வெற்றிக்கு காரணமான ஜடேஜாவுக்கும் அணியின் கேப்டன் தல தோனிக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய வெற்றிக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மைதான மைதானத்திலேயே துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தீபக் சாஹர் நேற்று தான் அணிந்திருக்கும் சிஎஸ்கே ஜெர்சியில் எம்எஸ் தோனியிடம் ஆட்டோகிராப் கேட்டபோது தோனி முதலில் போட மறுத்துவிட்டார். அதன் பிறகு தீபக் சாஹர் கட்டாயப்படுத்திய பிறகு கையெழுத்து போட்டார்.

ஒரு அணியில் இடம் பெற்றுள்ள வீரர் அணிந்துள்ள ஜெர்ஸியில் கையெழுத்து போடுவது அந்த அணியை அவமதிப்பது போன்றது என்று கூறப்படுவதால் தோனி கையெழுத்து போட மறுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் வெற்றி கொண்டாட்டத்தின் போது தீபக் சாஹரை ஏமாற்றமடைய செய்ய வேண்டாம் என்றுதான் கடைசியில் அவர் கையெழுத்து போட்டார்.

அதுமட்டுமின்றி நேற்றைய போட்டியில் சுப்மன் கில் கொடுத்த ஒரு மிக எளிதான கேட்சை தீபக் சாஹர் கோட்டை விட்டதும் அவர் மீது தோனிக்கு மன வருத்தம் இருந்திருக்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது.

More News

ஒரே விளையாட்டு.. ஒரு அணி.. ஒரு மனிதன்.. தோனிக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து..!

தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக கைப்பற்றிய நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகளும்

அடுத்த வருடம் விளையாடுவாரா தோனி?

நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதனை அடுத்து கோப்பையைப் பெற்றுக்

தோனியின் கண்களில் ஆனந்தக்கண்ணீர்.. ஜட்டுவை தூக்கி வைத்து கொண்டாட்டம்..!

பொதுவாக தல தோனி ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த கொள்ள மாட்டார், அதே போல் தோல்வி அடைந்தாலும் கூட வருத்தத்தையும் வெளிக்காட்ட மாட்டார்.

வெற்றிக்கு பின் வருங்கால மனைவியை அறிமுகம் செய்த ருத்ராஜ்.. தோனியுடன் புகைப்படம்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான ருத்ராஜ் கெய்க்வாட் நேற்று ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே வென்றவுடன் தல தோனி மற்றும் தனது வருங்கால மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை

நடிகை அனுஷ்கா சர்மா சினிமாவை விட்டு விலகுகிறாரா? பரபரப்பு தகவலால் அதிர்ச்சியான ரசிகர்கள்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை அனுஷ்கா சர்மா தனது சினிமா வாழ்க்கை குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.