சீமான் அவர்களே நீங்கள் செய்வது தவறு! தாக்கப்பட்ட தோனி ரசிகர் ஆவேசம்

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணியின் ஐபிஎல் போட்டியை பார்க்க வந்த தோனியின் தீவிர ரசிகர் சரவணன், தனது உடல் முழுவதும் மஞ்சள் பெயிண்டை அடித்து கொண்டு நெஞ்சில் தோனி என்ற எழுத்துடன் போட்டியை பார்க்க சென்றார். அப்போது அவரை ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராட்டம் செய்த அரசியல் கட்சி தொண்டர்கள் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து சரவணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

காவிரி பிரச்சனைக்கு போராடும் கட்சியினர் எங்களை தாக்குவது ஒரு தீர்வு கிடையாது. சீமான் அவர்களே நீங்கள் தவறு செய்கிறீர்கள், என்னை உங்கள் ஆட்கள் அடித்தது தவறு. என்னை உங்கள் கட்சியினர் அடித்ததற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆகணும். நீங்கள் தமிழர்தானே, நடிகர் நடிகைகள் படம் நடித்து கொண்டிருப்பதை உங்களால் நிறுத்த முடியுமா? எல்லா திரையரங்குக்களில் திரைப்படம் ஓடுகிறது, அதை உங்களால் நிறுத்த முடியுமா? ஒவ்வொரு வீட்டிலும் உள்ள டிவியில் சீரியல்களும் ரியாலிட்டி ஷோக்களும் ஓடுவதை உங்களால் நிறுத்த முடியுமா?

இவ்வளவு பேசும் நீங்கள் விவசாயிகளுக்காக என்ன செய்தீர்கள்? என்னுடைய ஒருநாள் சம்பளத்தை விவசாயிகளுக்காக கொடுக்க நான் தயார். விவசாயிகளுக்காக யாருமே எதுவுமே செய்யவில்லை' என்று கூறினார்.

மேலும் தன்னை வாலஜா சாலையில் நாம் தமிழர்கள் தொண்டர்கள் தாக்கியதாகவும், இந்த தாக்குதலுக்கு தக்க நேரத்தில் புகார் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்,. 

More News

தோனி மகளுடன் போஸ் கொடுத்த ஷாருக்கான்

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா போட்டியில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் போட்டி முடியும் வரை மைதானத்தில் போட்டியை ரசித்து பார்த்தார்.

சென்னை - கொல்கத்தா போட்டியின் சில சுவாரஸ்யங்கள்

சென்னை அணியின் கேப்டன் தோனியும், கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் விக்கெட் கீப்பர்கள்

அந்த நாலுபேர் தான் எல்லாத்துக்கும் காரணம்: ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்

தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் திரையுலக பிரபலங்கள் குறித்து தகவல்களை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி

சிஎஸ்கே உடை இலவசம், ஒரு டம்ளர் தண்ணீர் ரூ.10: பகல்கொள்ளையில் சேப்பாக்கம் மைதானம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து பார்வையாளர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

ஐபிஎல் போராட்டம்: பாரதிராஜா-வைரமுத்து உள்பட பலர் கைது

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா சாலையில் இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர், கவிஞர் வைரமுத்து