தோனியின் ரசிகர் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,April 10 2018]

சென்னையில் இன்று இன்னும் சற்று நேரத்தில் ஐபிஎல் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை நடத்த விடாமல் தடுக்க பல அரசியல் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும், அண்ணா சாலையில் குவிந்திருப்பதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காணப்படுகிறது.

இந்த நிலையில் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர் சிஎஸ்கே உடையணிந்து உடல் முழுவதும் மஞ்சள் நிற பெயிண்ட் அடித்து போட்டியை பார்க்க சென்று கொண்டிருந்தார். சிஎஸ்கே உடை அணிந்த அவரை அரசியல் கட்சியினர் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக திடுக்கிடும் செய்தி  வெளியாகியுள்ளது. 

தாக்குதலுக்கு ஆளான தோனி ரசிகர் பின்னர் அரசியல் கட்சியினர்களிடம் இருந்து தப்பித்து போலீசார் ஒருவரிடம் புகார் கூரும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகியுள்ளது. சிஎஸ்கே ரசிகர்களையும் அரசியல் கட்சியினர் தாக்கி வருவது போராட்டம் வேறு திசையில் திரும்புவதையே காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித் குறித்து விஜய் தந்தை கூறியது என்ன தெரியுமா?

'அஜித் இன்னும் பல பிறந்த நாள்களை கொண்டாடி அவரது வாழ்க்கையும், தொழிலும் குடும்பமும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

சென்னை அண்ணா சாலையின் தற்போதைய நிலவரம்:

அண்ணாசாலையில் ஐ.பி.எல். டிக்கெட்டுகளை எரித்தும், பிரதமர் மோடி படத்தை அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் போராட்டம்.

அண்ணா சாலையில் போலீஸ் தடியடி: போர்க்களமானது போராட்டம்

சென்னை அண்ணா சாலையில் போலிசாரின் தடுப்புகளை உடைத்துவிட்டு போராட்டக்காரர்கள் வாலஜா சாலையில் நுழைய முயன்றதால் அந்த பகுதியே போர்க்களமாக காட்சி அளித்தது. 

அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்த சீமான்: பெரும் பரபரப்பு

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நூற்றுக்கணக்கான நாம்தமிழர் கட்சி தொண்டர்கள் சென்னை அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைத்துள்ளதால்

ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம்: திடீரென களத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள்

காவிரி, ஸ்டெர்லைட் போராட்டங்கள் தமிழகத்தில் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த போராட்டங்களை திசைதிருப்பும்