ஐஸ்வர்யாவுடன் இணைந்து புகைப்படம், அடுத்த சில மணி நேரங்களில் தனுஷின் 'வாவ்' டுவிட்!

  • IndiaGlitz, [Monday,August 22 2022]

பிரிந்த மனைவியுடன் இன்று தனுஷ் புகைப்படம் எடுத்துக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த புகைப்படம் எடுத்துக் கொண்ட ஒரு சில மணி நேரத்தில் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’வாவ்’ என பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி தம்பதிகள் பிரிந்து விட்டாலும் இந்த தம்பதியின் மகன் யாத்ரா, விளையாட்டில் கேப்டன் பதவியை பெற்றதையடுத்து இருவருமே பள்ளிக்கு சென்று மகனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

மேலும் பிரிவு அறிவிப்புக்குப் பின் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் மகன்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இருவரும் மீண்டும் சேர வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் போஸ்டர் இன்று வெளியானதை அடுத்து இந்த போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள தனுஷ், ’வாவ்’ என குறிப்பிட்டுள்ளார்

பிரிந்த மனைவியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் மற்றும் ரஜினியின் புகைப்படத்திற்கு செய்த டுவிட் ஆகியவை பார்க்கும் போது மீண்டும் தனுஷ், ரஜினி குடும்பத்தில் இணைந்து விட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.