தனுஷின் 3வது படமும் ரிலீசுக்கு தயார்: வைரலாகும் டுவீட்!

  • IndiaGlitz, [Wednesday,December 09 2020]

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது தெரிந்ததே. அதேபோல் தனுஷ் நடித்து வரும் ‘அட்ராங்கே’ என்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அந்த படமும் இன்னும் ஒருசில வாரங்களில் ரிலீசுக்கு தயாராகிவிடும்

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வந்த ’கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு லாக்டவுனுக்கு முன்னரே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடியும் தருவாயில் திடீரென லாக்டவுன் வந்து விட்டதால் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 9 மாதங்களாக நடைபெறவில்லை

இந்த நிலையில் சமீபத்தில் கர்ணன் படத்தின் மீண்டும் தொடங்கிய நிலையில் சற்று முன் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ’கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார்

மேலும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தயாரிப்பாளர் தாணு அவர்களின் மிகப்பெரிய ஒத்துழைப்புக்கு நன்றி என்றும் அனைத்து ’கர்ணன்’ படத்தின் டெக்னீஷியன்கள் மற்றும் சக நடிகர்கள் அனைவருக்கும் எனது நன்றி என்றும் குறிப்பாக ஒரு சிறப்பு நன்றி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். தனுஷின் இந்த டுவிட்டர் போது வைரலாகி வருகிறது

More News

யாராவது ஒருத்தரவாது எனக்கு சப்போர்ட் பண்ணிங்களா? ஷிவானியிடம் கண்ணீர் விட்ட பாலா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் கமல்ஹாசன், பாலாஜியை வறுத்தெடுத்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். சனம், பாலா மோதலின்போது

'அப்ப தொங்கு' நிஷாவை பழிக்கு பழிவாங்கும் அர்ச்சனா!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று நடைபெற்ற புதிய மனிதா டாஸ்க்கில் அர்ச்சனாவின் ஆத்திரத்தை கிளறும் வகையில் நிஷா கேள்வி கேட்டதால்

ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து 300 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்த பரிதாபம்… மர்மநோய் காரணமா???

ஆந்திர மாநிலத்தில் மர்மநோய் தாக்கத்தால் கடந்த சில தினங்களாக கடும் பதற்றம் நிலவி வருகிறது.

பிறந்த குழந்தைக்கு 27 வயதா??? சாதனை சம்பவத்தால் உறைந்து போன பெற்றோர்கள்!!!

அமெரிக்காவின் டெல்லிஸி மாகாணத்தில் 27 வருடங்களாக உறை பனியில் சேகரித்து வைக்கப்பட்ட கரு முட்டையில் இருந்து ஒரு குழந்தை பிறந்து இருக்கிறது.

பிக்பாஸ் வீட்டில் எதிர்பாராத வைல்ட்கார்ட் எண்ட்ரி? 

பிக்பாஸ் வீட்டில் தனி திறமையுடன் விளையாடிக்கொண்டிருந்த மிகச் சிலரில் ஒருவர் சனம்ஷெட்டி என்பது அனைவரும் அறிந்ததே. அவர் அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைப்பதாக விமர்சனம் செய்யப்பட்டாலும்