இரண்டாவது படத்திலேயே இதுவரை ஏற்று நடிக்காத வேடத்தில் தனுஷ்

  • IndiaGlitz, [Saturday,February 10 2018]

தனுஷ் இயக்கிய முதல் படமான ப.பாண்டி திரைப்படம் அனைத்து தரப்பினர்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் இரண்டாவது படத்தை விரைவில் இயக்கவுள்ளார் என்பதையும், இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது படத்தில் அவரே முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் தனுஷ் இதுவரை ஏற்றிராத மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கவுள்ளாராம். அதாவது தனுஷ் இந்த படத்தில் வாய் பேச முடியாத, காது கேட்க முடியாத கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அல்லது நாகார்ஜூனா ஆகிய இருவரில் ஒருவர்  நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல் படம் போலவே தனுஷ் இயக்கவுள்ள இந்த இரண்டாவது படமும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளில் இருந்து தெரியவருகிறது

More News

இரண்டே மாதத்தில் விடிய போகும் 'செக்க சிவந்த வானம்'

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படமான 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் முழு விபரங்களுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியானது குறித்து பார்த்தோம்.

தீபா வீட்டுக்கு வந்த வருமான வரித்துறை அதிகாரி சுவர் ஏறி குதித்தது ஏன்?

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்வதாக தகவல்கள் பரவியது

ரஜினி என்ன பி.இ. பட்டதாரியா? அமைச்சர் ஜெயகுமார் கேள்வி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களை சந்தித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது இந்தியாவை விட முதலில் தமிழகத்தில் கெட்டு போயிருக்கும் சிஸ்டத்தை முதலில் சரிசெய்ய வேண்டும்

ஜீயரின் ஒன்றரை நாள் உண்ணாவிரதம் திடீர் நிறுத்தம்! காரணம் என்ன?

ஆண்டாள் குறித்து கவியரசு வைரமுத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜீயர் உண்ணாவிரதம் இருந்தார்

மணிரத்னம் படத்தின் டைட்டில் மற்றும் முழுவிபரங்கள்

சிம்பு, விஜய்சேதுபதி உள்பட மல்டிஸ்டார்கள் நடிக்கவுள்ள படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார் என்பது தெரிந்ததே