close
Choose your channels

சூர்யாவை அடுத்து தனுஷின் நன்றி செய்தி

Thursday, December 31, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா தயாரித்த இரண்டு படங்களின் வெற்றிக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்த செய்தியை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் சூர்யாவை அடுத்து தனுஷ் கடந்த 2015ஆம் ஆண்டு தனக்கு சிறப்பாக அமைந்திட ஒத்துழைப்பு தந்த ரசிகர்கள், இயக்குனர்கள், ஊடகங்கள் மற்றும் பெற்றோர், கடவுள் ஆகியோர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


இவ்வருடம் வெளியான தன்னுடைய படங்களை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ள தனுஷ் இவ்வருடம் தன்னை இயக்கிய இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், பாலாஜி மோகன், வேல்ராஜ், பால்கி ஆகியோர்களுக்கு தான் நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் தனது படங்களை நல்ல முறையில் விமர்சனம் செய்து தனக்கு ஊக்கமும், ஒத்துழைப்பும் அளித்த மீடியா மற்றும் பத்திரிகையாளர்களுக்கும் தனது நன்றியை அவர் தெரிவித்து கொண்டார்.

2015ஆம் வருடம் மக்களுக்கு நல்ல அனுபவங்களையும், கெட்ட அனுபவங்கள் மூலம் ஒருசில பாடங்களையும் நமக்கு கற்று கொடுத்துள்ளதாக கூறிய தனுஷ், கடைசியாக தன்னுடைய பெற்றோர்களுக்கும் கடவுளுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment