தனுஷ் மகன் ஒரு படத்தையே முடித்துவிட்டாரா? கோலிவுட்டில் இன்னொரு வாரிசு..!

  • IndiaGlitz, [Saturday,March 02 2024]

கோலிவுட் திரை உலகை பொருத்தவரை திரை உலக பிரபலங்களின் வாரிசுகள் பலர் அறிமுகம் ஆகி வருகின்றனர் என்பதும் அதில் சிலர் உச்சத்தை அடைந்துள்ளனர் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தனுஷின் மகன் ஒரு படத்தையே முடித்து விட்டதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷின் 50 படமான ‘ராயன்’ என்ற படத்தை அவரே இயக்கி முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக தனுஷ் இந்த படத்தில் நடித்த நட்சத்திரங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியிட்டார் என்பதும் அவை இணையத்தில் வைரலானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தில் தான் தனுஷ் தனது மகன் யாத்ராவை அறிமுகம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனுஷ் மகன் யாத்ராவுக்கு நடிப்பில் விருப்பமில்லை என்பதால் அவரது விருப்பப்படி இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக அவர் அறிமுகமாகியுள்ளார் என்றும் ’ராயன்’ படத்தின் ஒளிப்பதிவாளர் பெயர் இதுவரை ரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் தனுஷின் மகன் யாத்ரா தான் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் என்றும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் தனுஷ் மகன் சைலண்ட் ஆக ஒரு படத்தையே முடித்து விட்டதாக கூறப்படும் நிலையில் கோலிவுட் திரையுலகில் இன்னொரு வாரிசு நடிகர் என்ட்ரி ஆகி உள்ளார் என்பது தெரிய வருகிறது.

More News

அயோத்தி ராமர் கோவிலில் 90 வயதில் பரதநாட்டியம் ஆடிய தமிழ் நடிகை.. சிவாஜி, ஜெமினியுடன் நடித்தவர்..!

தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகளிலும், இந்தியிலும் பல திரைப்படங்கள் நடித்த 90 வயது நடிகை சமீபத்தில் அயோத்தி ராமர் கோவிலில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்திய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நாங்க சந்தோஷத்துல திக்குமுக்காடிட்டோம்: அதுக்கு காரணம் எங்க மருமகள் தான்: அசோக்செல்வன் தாயார்..!

நடிகர் அசோக்செல்வன் தாயார் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது 'நாங்கள் மிகுந்த சந்தோஷமாக இருக்கிறோம், எங்களுக்கு பிடித்த காரை எனது  மகன் மற்றும் மருமகள் வாங்கி கொடுத்து

 சிறகடிக்க ஆசை: இதே கேள்வியை முத்து திருப்பி கேட்டால் என்ன ஆகும்? ரோகிணியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' என்ற சீரியல் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் சில திருப்பங்கள் ஏற்பட்டு விறுவிறுப்பாக சென்று

கெட்ட வார்த்தையால் திட்டிய விஜய் ரசிகர்.. வெங்கட்பிரபுவின் பதிலடி என்ன தெரியுமா?

விஜய் ரசிகர் ஒருவர் 'கோட்' படத்தின் அப்டேட் கேட்டு இயக்குனர் வெங்கட் பிரபுவை கெட்ட வார்த்தையால் திட்டிய நிலையில் அவருக்கு வெங்கட் பிரபு பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்வம் பெற பரிகாரங்கள்: பாலாறு சுவாமிகள் அவர்களின் ஆலோசனைகள்

செல்வம், வெற்றி, மகிழ்ச்சி பெற பரிகாரங்கள் எப்படி செய்வது? அதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும்?