தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் இணையும் மகன் யாத்ரா.. என்ன செய்ய போகிறார்?

  • IndiaGlitz, [Wednesday,August 28 2024]

தனுஷ் இயக்கத்தில் உருவான ராயன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் தனுஷின் மகன் யாத்ரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தனுஷின் உறவினர் மகன் பவிஷ் ஹீரோவாக நடிக்கும் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் அனிதா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மேலும் தனுஷ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்றும் இந்த படத்தின் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை தனுஷின் மகன் யாத்ரா எழுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தனுஷ் பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ள நிலையில் தற்போது அவரது மகனும் பாடலாசிரியராக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகி உள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

ப்ரியா அட்லி ஆரம்பிக்க போவது இதுதான்.. ஆகஸ்ட் 30 முதல் நெட்டிசன்களுக்கு விருந்து?

பிரபல இயக்குனர் அட்லி மனைவி ப்ரியா அட்லி விரைவில் ஒரு புதிய அம்சத்தை ஆரம்பிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் அது என்னவாக இருக்கும்? புதிய தொழில்

'விடாமுயற்சி' 'குட் பேட் அக்லி' ரிலீஸ் தேதிகள் மாறுகிறதா? அஜித் ரசிகர்கள் அதிருப்தி..!

அஜித் நடித்த 'விடாமுயற்சி' திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்றும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்

அரெஸ்ட் பண்ணிருவேன்னு மிரட்டினாங்க.. பிக்பாஸ் சனம் ஷெட்டி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!

பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் நடிகை சனம் ஷெட்டி இன்று காலையில் தனக்கு நேர்ந்த ஒரு அதிர்ச்சி அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'த்ரிஷ்யம்' நடிகை ஆஷா சரத்துக்கும் பாலியல் தொல்லையா? வழக்கு போடுவேன் என மிரட்டல்..!

பிரபல மலையாள நடிகர் சித்திக் மீது சில நடிகைகள் பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் 'த்ரிஷ்யம்' நடிகையும் பாலியல் துன்பத்திற்கு ஆளாகியதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தியால் பரபரப்பு

சிவகார்த்திகேயனுக்கு இன்று விசேஷமான நாள்.. மனைவி ஆர்த்தி கூறியது என்ன தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு விசேஷமான நாளை அடுத்து அவரது மனைவி சமூக வலைதளத்தில் கூறிய பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.