'நானே வருவேன்' முக்கிய பணி தொடக்கம்: செல்வராகவன் வெளியிட்ட மாஸ் புகைப்படம்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நானே வருவேன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை அமைக்கும் பணி தொடங்கி விட்டதாக செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைக்கும் காட்சி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

’நானே வருவேன்’ திரைப்படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் அறிவித்திருந்த நிலையில் விரைவில் சரியான ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கதாநாயகன் வில்லன் என இரண்டு வித்தியாசமான கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ள இந்த படத்தில் எல்லி அவ்ரம், இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தனுஷின் அடுத்த வெற்றிப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.