தனுஷ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்: ஹீரோயின் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,March 29 2022]

தனுஷ் இயக்கிய ’பா பாண்டி’ என்ற திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது தனது அடுத்த படத்தை அவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன .

தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் தனுஷும் ஒரு கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நாயகியாக அதிதி ராவ் ஹைதரி நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது.

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, சரத்குமார், ஸ்ரீசாந்த் உள்பட பலர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீன் ரோல்டன் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாக உள்ளது.

இந்த படம் குறித்து நாகார்ஜுனா கூறுகையில், ‘இது ஒரு பீரியட் படம் என்றும், 600 வருடங்களுக்கு முந்தைய கேரக்டர் தனக்கு வழங்கப்பட்டதாகவும், இதுவரை இப்படி ஒரு கேரக்டரில்தான் நான் நடித்ததே இல்லை என்றும் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்திற்கு ’நான் ருத்ரன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டாலும் விரைவில் அதிகாரபூர்வமாக டைட்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மாடல் அவதாரம் எடுத்த எம்.பி… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் ஒருவர் தற்போது

அரபிக்குத்துப் பாடலுக்கு மாஸ் நடனம் ஆடிய 3 குயின் நடிகைகள்… வைரலாகும் வீடியோ!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் “பீஸ்ட்“ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

'நானே வருவேன்' படத்தின் நாயகியாகும் வெளிநாட்டு நடிகை!

தனுஷ் நடித்து வரும் 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும்

ரிலீசுக்கு 3 நாட்களுக்கு முன் செம விருந்து: விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் ரிலீசுக்கு மூன்று நாட்களுக்கு முன் விஜய் ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன .

வருணை பழிக்கு பழி வாங்காமல் விடமாட்டேன்: பிக்பாஸ் அக்சரா சபதம்!

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான அக்சரா தனது சக போட்டியாளரான வருணை பழிவாங்காமல் விடமாட்டேன் என கூறி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.