2 பயோபிக் படத்தில் நடிக்க ஆசை.. ஒன்னு இளையராஜா.. இன்னொன்னு.. தனுஷ் கூறிய தகவல்..!

  • IndiaGlitz, [Wednesday,March 20 2024]

நான் என்னுடைய வாழ்க்கையில் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், அதில் ஒன்று இசைஞானி இளையராஜா, இன்னொன்று யார் என்பதை தனுஷ் தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘இளையராஜா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியான நிலையில் இது குறித்த விழா ஒன்றில் நடிகர் தனுஷ் பல விஷயங்களை மனம் திறந்து பேசி உள்ளார்.

அதில் ’நான் என்னுடைய வாழ்க்கையில் இரண்டு பேருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஒன்று இசைஞானி இளையராஜா இன்னொன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்று தெரிவித்தார். இந்த இரண்டில் ஒன்று தற்போது நிறைவேறி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இசைஞானி இளையராஜாவின் இசை தான் எனக்கு துணை. நான் இளையராஜா அவர்களின் ரசிகன், பக்தன், அவருடைய இசை தான் எனக்கு துணையாக இருந்துள்ளது. எனக்கு நடிப்புன்னா என்னன்னு தெரியாத காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் ஒரு காட்சியை படமாக்கும்போது ஒரு காட்சியை படமாக்க வேண்டும் என்றால் அந்த காட்சிக்கு தகுந்த பாடலை அல்லது பின்னணி இசையை கேட்பேன். அந்த இசை அந்த காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை எனக்கு சொல்லும், அதை அப்படியே உள்வாங்கி அந்த காட்சியில் நடித்து விடுவேன். வெற்றிமாறன் கூட இதை ஒரு முறை பார்த்திருக்கிறார்.

இப்பவும் ‘இளையராஜா’ படத்தில் நடிப்பது எனக்கு மிகப் பெரிய சேலஞ்ச் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் எனக்கு அப்படி தெரியவில்லை. இந்த கேரக்டரில் நடிப்பதற்கு எனக்கு அவருடைய இசை துணை நிற்கும்’என்று தனுஷ் பேசினார்.

More News

ஆர்மோனிய பெட்டியுடன் சென்னை வந்த இசைஞானி: 'இளையராஜா' பர்ஸ்ட் லுக் போஸ்டர்..

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் ஏற்கனவே வெளியான தகவலை பார்த்தோம்.

'ரோலக்ஸ்' படம் குறித்து சூப்பர் அப்டேட்டை தெரிவித்த சூர்யா.. ரசிகர்கள் செம்ம குஷி..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களில் 'ரோலக்ஸ்' என்ற கேரக்டரில் சூர்யா தோன்றினார் என்பதும் அந்த கேரக்டரில் அவர் நடிப்பில் மிரட்டிய

ரூ.400 கோடி வசூலித்த படத்தின் 2ஆம் பாகத்தில் ருக்மணி வசந்த்.. கூரையை பிய்த்து கொட்டும் அதிர்ஷடம்..!

கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரூ.400 கோடி வசூல் செய்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை ருக்மணி வசந்த் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவனந்தபுரத்தில் ரஜினியை சந்திக்கிறாரா விஜய்? அரசியல் ஆலோசனை நடக்குமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாளை 'வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரம் செல்ல இருப்பதாகவும் ஏற்கனவே திருவனந்தபுரத்தில் இருக்கும் விஜய் அவரை சந்திக்க

சினிமா- ல துணை இயக்குனரா இருக்கறதுக்கு ,நான் ஏன் உங்க கூட படுக்கணும் ?

இளைஞர்களின் காதலை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளை தோலுரிக்கும் திரைப்படம் தான் இந்த காடுவெட்டி.இதில் எந்த சாதியையும் ஏற்றியோ இறக்கியோ காட்டவில்லை...........