close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் இணைந்துவிட்டோம்: புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்த்த தனுஷ் 

Monday, March 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நீண்ட இடைவேளைக்கு பின்னர் மீண்டும் இணைந்து விட்டோம் என தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

தனுஷ் தற்போது ’வாத்தி’ என்ற தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த சில வாரங்களாக ஐதராபாத்தில் தங்கி இருந்தார். இதன் காரணமாக சென்னை பக்கம் வராமல் இருந்த தனுஷ் தற்போது தான் அந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ளார் .

சென்னையில் உள்ள தனது வீட்டில் தனக்காக காத்திருந்த செல்ல நாய்க்குட்டிகளை நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் பார்த்து  அவைகளுடன் கொஞ்சி விளையாடும்போது எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் தனுஷ் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இந்த செல்லப் பிராணிகளுடன் இணைந்து உள்ளதை அடுத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.

தனுஷ் நடித்து முடித்துள்ள ‘மாறன்’, ‘தி க்ரே மேன்’ மற்றும் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment