இரண்டே மாதத்தில் அடுத்த படத்தை முடிக்க தனுஷ் திட்டம்.. படப்பிடிப்பு எங்கே தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,May 31 2024]

தனுஷ் தற்போது ’குபேரா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் தனது அடுத்த படத்தை இரண்டே மாதங்களில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் நடித்த ’ராயன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த மாதம் வெளியாக உள்ளது என்பது தெரிந்தது. இந்த நிலையில் அவர் ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகயிருக்கும் ’தேரா இஷ்க் மெய்ன்’ என்ற பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்கும் என்றும் இரண்டே மாதத்தில் இந்த படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் ஒரு ஷெட்யூல் மற்றும் அதே மாநிலத்தில் இன்னொரு ஷெட்யூல் என மொத்தமாக 2 ஷெட்யூலில் 2 மாதங்களில் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை உட்பட நட்சத்திரங்களும் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் தனுஷ் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’ராயன்’ ’குபேரா’ ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ’தேரா இஷ்க் மெய்ன்’ என அடுத்தடுத்து தனுஷின் படங்கள் வெளியாக இருப்பதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More News

திடீரென இலங்கை செல்லும் 'கோட்' படக்குழு.. வெங்கட்பிரபுவின் மாஸ்டர் பிளான்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும் அடுத்த கட்டமாக இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாகவும் கூறப்பட்டது.

கமல்ஹாசனுடன் த்ரிஷா.. 'தக்லைஃப்' படப்பிடிப்பின்போது ஒரு ஜாலி போட்டோ.. உடன் இருப்பவர் யார்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் 'தக்லைஃப்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை

நள்ளிரவில் அஞ்சலி திடீரென போட்ட ட்வீட்.. பாலையா விவகாரத்தில் இப்படி சொல்லிவிட்டாரே?

கடந்த இரண்டு நாட்களாக நடிகை அஞ்சலியை திரைப்பட விழா ஒன்றின் போது மேடையில் திடீரென தெலுங்கு நடிகர் பாலையா தள்ளிவிட்ட விவகாரம் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில்

அந்தமானில் ஆக்சன் காட்சிகள்.. 'சூர்யா 44' படத்தில் 1 நிமிட வீடியோவை வெளியிட்ட இயக்குனர்..!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 44' படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் அந்தமான் தீவில் நடைபெற

சென்னையில் பில்லி, சூனியம் நீக்கும் கிங்கிணி அம்மாள்!

சென்னை அயனவரத்தைச் சேர்ந்த கிங்கிணி அம்மாள் என்ற திருநங்கை, தன்னுடைய ஆன்மீக அனுபவங்கள் மற்றும்