இளம் இயக்குனருடன் இணையும் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,February 03 2020]

தனுஷ் நடித்த ’பட்டாஸ்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்திருக்க வாய்ப்பு இருப்பதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தனுஷ்-சத்யஜோதி பிலிம்ஸ் இணையும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் தனுஷ் 43 என்ற படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே ’துருவங்கள் பதினாறு’ ’நரகாசுரன்’ மற்றும் ’மாபியா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ்-கார்த்திக் நரேன் இணையும் இந்தப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கிவரும் ’கர்ணன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் அவர் கார்த்திக் நரேன் படப்பிடிப்பில் இணைவார் என்று தெரிகிறது.

More News

ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்த படத்தின் டீசர் குறித்த தகவல்

'பொல்லாத உலகில் பயங்கர கேம்' என்று கூறப்படும் 'பப்ஜி' என்ற திரைப்படத்தில் ஐஸ்வர்யா தத்தா ஆடையின்றி நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்து இருந்தார் என்ற செய்தி சமீபத்தில்

கமல்ஹாசனின் 'அல்வா' விமர்சனத்திற்கு செல்லூர் ராஜூ பதிலடி

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நேற்று பாராளுமன்றத்தில் 2020ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஒரு சில அம்சங்கள் ஏழை எளிய

நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்தாதது ஏன்? கருணாஸ் விளக்கம்

கடந்த ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை ஐகோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்த நிலையில் தற்போது இந்த தீர்ப்பை எதிர்த்து விஷால் தரப்பு

திருமூர்த்தியும் ஷங்கர் மகாதேவன் மகனும் எனக்கு ஒன்றுதான்: டி.இமான்

ஜீவா நடித்த 'சிறு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் டி இமான் கலந்துகொண்டு பல சுவாரசிய தகவல்களை அளித்தார்.

குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவி!

திண்டிவனம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் குழந்தை பிறந்த அன்றே திருமணம் செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது