10ஆம் வகுப்பு மாணவி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் தனுஷ் பட வில்லன் நடிகர்!

தனுஷ் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் பத்தாம் வகுப்பு மாணவி இயக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷ் நடித்த ’மாரி’ என்ற படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல பாடகர் விஜய் யேசுதாஸ். அதன் பின்னர் இவர் ’படை வீரன்’ என்ற படத்தில் நாயகனாக நடித்தார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சின்மயி நாயர் என்பவரின் இயக்கத்தில் விஜய் ஜேசுதாஸ் நாயகனாக நடிக்கவுள்ளார்.’ கிளாஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு அனில்ராஜ் வசனம் எழுத இருப்பதாகவும் சாபு குருவில்லா மற்றும் பிரகாஷ் குருவில்லா ஆகியோர் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பென்னி ஜோசப் ஒளிப்பதிவில் மனு ஷாஜூ படத்தொகுப்பில் எஸ்.ஆர்.சுராஜ் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் ஜேசுதாஸ் கமாண்டர் வேடத்தில் நடிக்க இந்த படத்தில் சுதீர், மீனாட்சி உள்பட பலர் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

தமிழில் படம் தயாரிக்கும் ஷாருக்கானின் 'ரெட் சில்லீஸ்' நிறுவனம்: முதல் படம் இதுதான்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துவரும் 'ஜவான்'  திரைப்படம் தமிழிலும் ரிலீசாக இருக்கும் நிலையில் அவரது ரெட் சில்லீஸ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க

மீண்டும் வெளிநாடு பறந்த நயன் - விக்கி: இரண்டாவது ஹனிமூனா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் நேரில்

திருமணம் நிறுத்தப்பட்டுவிட்டதா? ஒரே ஒரு புகைப்படத்தால் பதில் சொன்ன பூர்ணா!

நடிகை பூர்ணாவின் நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'தி லெஜண்ட்' நாயகியை வச்சு செய்யும் ரிஷப் பண்ட் ரசிகர்கள்: இதுதான் காரணம்!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ரிஷப் பண்ட் ரசிகர்கள் நடிகை ஊர்வசி ரெளட்டாலாவை சமூகவலைதளத்தில் வச்சு செய்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல பெண் இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த இசைஞானி இளையராஜா!

பிரபல பெண் இயக்குனரின் அடுத்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது