சரத்குமார் மீது நடிகர் தனுஷின் தாய் வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

  • IndiaGlitz, [Thursday,June 06 2024]

நடிகர் தனுஷின் தாய் திடீரென சரத்குமார் மீது வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் நீதிமன்றம் இந்த வழக்கில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

நடிகர் தனுஷின் தாய் தனது குடும்பத்துடன் சென்னை தியாகராஜ நகர் ராஜமன்னார் தெருவில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். இந்த அப்பார்ட்மெண்டில் அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் பொதுவாக உள்ள மேல் தளத்தை சரத்குமார் ஆக்கிரமித்து அதை வணிகரீதியாக பயன்படுத்துவதாக குற்றம் காட்டப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை அடுத்து நடிகர் தனுஷின் தாய் உள்பட அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள சில குடியிருப்பு வாசிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

நடிகர் சரத்குமார் உள்ளிட்ட சிலர் மட்டும் குடியிருப்பின் மேல் பகுதியிலுள்ள பொதுவான பகுதிகளை மற்ற குடியிருப்புவாசிகள் பயன்படுத்துவதை தடுத்து வருவதாகவும் இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாதாடினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சென்னை மாநகராட்சி மற்றும் நடத்த நடிகர் சரத்குமார் ஆகியோர் பதிலளிக்க உத்தரப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கு நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More News

பிரதமர் பதவி கொடுத்தாலும் இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டேன்: 2 எம்பிக்கள் வைத்துள்ள பிரபல நடிகர்..!

பிரதமர் பதவி கொடுத்தால் கூட மோடியை விட்டுவிட்டு இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டேன் என இரண்டு எம்பிக்கள் வைத்துள்ள பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

'விடாமுயற்சி' படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்லும் அஜித்.. இணையும் 2 முன்னணி நடிகைகள்..!

அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் ஜூன் 7ஆம் தேதியுடன் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைய இருப்பதாக

ஓடிடியில் சுந்தர் சியின் 'அரண்மனை 4' .. எந்த ஓடிடியில்? எந்த தேதி? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'அரண்மனை 4' திரைப்படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் என்பதும் இந்த படம் மே மாதம் 3ஆம் தேதி வெளியான நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்றது

சென்னை திரும்பிய ரஜினிகாந்த்.. பிரதமர் மோடிக்கும் 2 நண்பர்களுக்கும் வாழ்த்து..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றார் என்பதும் அவர் கேதார்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது

'அரண்மனை' 4ஆம் பாகத்தை அடுத்து இன்னொரு 4ஆம் பாக திரைப்படம்.. த்ரிலுக்கு தயாராகும் ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகில் அதிகபட்சமாக இரண்டு பாகங்கள் மட்டும் திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் 'சிங்கம்' 'இந்தியன்' உள்பட ஒரு சில படங்கள் மட்டுமே மூன்றாம் பாகமும் தயாரிக்கப்பட்டு வருகிறது.