5 வருடங்களுக்கு பின் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு.. இன்று இரவு சூப்பர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Sunday,April 09 2023]

ஐந்து வருடங்களுக்கு பின்னர் தனுஷ் அதிரடி முடிவு எடுத்துள்ளதை அடுத்து இது குறித்து அறிவிப்பு இன்று இரவு 7.30 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் தனது முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் இணைந்து தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் வொண்டர்பார் பிலிம்ஸ்.

இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘3’ என்ற படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், இதனை அடுத்து ’எதிர்நீச்சல்’ ’வேலையில்லா பட்டதாரி’ ’காக்கிச்சட்டை’ ’காக்கா முட்டை’ ’மாரி’ உட்பட பல வெற்றித் திரைப்படங்களை இந்நிறுவனம் தயாரித்தது.

ஆனால் ஒரு கட்டத்தில் இந்த நிறுவனம் தயாரித்த படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்ததை அடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ’மாரி 2’ படத்திற்கு பிறகு இந்நிறுவனம் வேறு எந்த புதிய படத்தையும் தயாரிக்கவில்லை.

இந்த நிலையில் 5 வருடங்களுக்கு கழித்து வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு இன்று இரவு 7.30 மணிக்கு வெளியாகும் என செய்திகள் வெளியாகி உள்ளன. இன்று வெளியாகும் அந்த அறிவிப்பு என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.