தனுஷ்-பிரபுசாலமன் படத்தின் மிரட்டலான டைட்டில்

  • IndiaGlitz, [Friday,January 08 2016]

தங்கமகன்' படத்தை அடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ள இன்னும் பெயரிடப்படாத 'படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு 'ரயில்' என்ற டைட்டில் வைக்க படக்குழுவினர் பரிசீலித்து வருவதாக நேற்று செய்திகள் வெளியாகியது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்திற்கு 'மிரட்டு' என்ற டைட்டிலை படகுழுவினர் தேர்வு செய்துள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ரயில்வே கேண்டீனில் பணிபுரியும் பூச்சியப்பன் என்ற கேரக்டரில் தனுஷும், சரோஜா என்ற ரயில் பயணியாக கீர்த்தி சுரேஷுடம் இந்த படத்தில் நடித்துள்ளனர். கேண்டீன் ஊழியர் தனுஷூக்கும் கேரள பெண் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்படும் காதலை விறுவிறுப்பான திரைக்கதையுடன் முழுக்க முழுக்க ரயிலில் படமாக்கியுள்ளார் இயக்குனர் பிரபுசாலமன். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

More News

அரசியல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அஜித்

கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் வேட்பாளராக இருந்த நரேந்திரமோடி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்தபோது...

மிருதன்' பட டிராக்லிஸ்ட் வெளியீடு

2015ஆம் ஆண்டின் கோலிவுட் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடித்த 'மிருதன்' படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது...

பிறந்த நாளில் வெள்ள நிவாரண நிதியளித்த சரோஜாதேவி

கன்னடத்து பைங்கிளி என்று அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜாதேவி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்....

வியாபாரத்தில் ஒன்றிணைந்தது ரஜினி-விஜய் படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கி வரும் 'கபாலி' திரைப்படம் மற்றும் இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'தெறி' திரைப்படம் ஆகிய இரண்டு படங்களையும் பிரபல முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே...

சிம்புவுடன் இணைகிறார் அடல்ட் காமெடி இயக்குனர்

சமீபத்தில் வெளியான ஜி.வி.பிரகாஷ், 'கயல்' ஆனந்தி மற்றும் மனிஷா நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' என்ற அடல்ட் காமெடி திரைப்படம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் ஒரு இளைஞர்களுக்கான படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்....