தனுஷின் 'திருச்சிற்றம்பலம்': முதல் நாளை விட அதிகமான இரண்டாம் நாள் வசூல்!

தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான நிலையில் இந்த படம் முதல்நாளில் ரூ 9 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பதும் அதில் 6 கோடி ரூபாய் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்யப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்திற்கு முதல் நாளில் கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக இரண்டாவது நாளில் முதல் நாளைவிட அதிக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது நாளில் மட்டும் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் 11 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் இதனை அடுத்து இந்த படம் இரண்டு நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் காட்சிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தபட்டிருப்பதாகவும் ஏற்கனவே முன்பதிவுகள் பல திரையரங்குகளில் முடிந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளதால், முதல் இரண்டு நாட்களை விட அடுத்த இரண்டு நாட்களில் மிக அதிகமாக வசூல் செய்யும் என்றும் முதல் நான்கு நாட்களில் இந்த படம் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான தனுஷ் படங்களில் இந்த படம் மிகப் பெரிய வெற்றி படமாக இருக்கும் என்பது வசூல் விவரங்களிலிருந்து தெரிய வருகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மற்றும் ’திருச்சிற்றம்பலம்’ படக்குழுவினர் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷூக்கு மிகவும் பொருத்தமான மிடில் கிளாஸ் இளைஞர் வேடத்தில் நடித்துள்ள இந்த கேரக்டர் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிய ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யாமேனன் ஆகியவர்களின் சிறப்பான நடிப்பு இந்த படத்தின் ப்ளஸ் ஆக அமைந்து உள்ளது. மேலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷின் படத்துக்கு அனிருத் இசை அமைத்து உள்ளார் என்பதும் இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது.

More News

அஜித்தின் 'ஏகே 61' கிளைமாக்ஸ் இந்த பள்ளத்தாக்கில் தான்: எச்.வினோத்தின் வேற லெவல் திட்டம்!

அஜித் நடித்து வரும் 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் அஜீத், மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர்

'சூர்யா 42' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு: யார் யார் இருக்காங்க பாருங்க!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 42' படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

பேருந்தில் பெண் பயணிகளை முறைத்து பார்த்தால் கைது: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளை முறைத்துப் பார்த்தாலோ, தொந்தரவு செய்தாலோ விசிலடித்து அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டாலோ காவல் துறையிடம்  புகார் கொடுக்கலாம்

பாவாடை தாவணியில் வெட்க சிரிப்புடன் ரம்யா பாண்டியன்: சகோதரர் பரசுபாண்டியன் கேட்ட செம கேள்வி

தமிழ் திரையுலகின் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான ரம்யா பாண்டியன் பாவாடை தாவணியில் வெட்கச் சிரிப்புடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ரசிகர்களுக்கு அஜித் கூறிய முக்கிய தகவல்: மேனேஜர் சுரேஷ் சந்திரா டுவிட்!

 நடிகர் அஜித் எந்தவித சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதால் அவர் தனது ரசிகர்களுக்கும் அறிவுரை கூற வேண்டும் என்றாலோ அல்லது பொது மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்