இன்று முதல் தொடங்கும் தனுஷின் புதிய படத்தின் படப்பிடிப்பு

  • IndiaGlitz, [Monday,January 22 2018]

தனுஷ் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் இன்று முதல் அவர் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'மாரி' படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது

தனுஷ், சாய்பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். இவரது இசையில் இசைஞானி பாடிய பாடல் ஒன்று இந்த படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். முதல் பாகத்தை இயக்கிய பாலாஜி மோகன் இந்த படத்தை இயக்கவுள்ளார். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.