தனுஷின் 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Friday,May 01 2020]

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று.

வந்த நிலையில் திடீர் திருப்பமாக கொரோனா வைரஸ் காரணமாக ’ஜகமே தந்திரம்’ படத்தின் அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. லண்டனில் நடந்து வந்த இந்த படத்தின் சவுண்ட் மிக்சிங் பணிகளும் நிறுத்தபட்டன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லையெனில் இந்த படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்றுமுன்னர் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் விரைவில் ‘ஜகமே தந்திரம்’ படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும் ’ஜகம்’ குணமானதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. அனேகமாக கொரோனா பாதிப்பு முடிவடைந்ததும் ரிலீஸாகும் முதல் படமாக ‘ஜகமே தந்திரம்’ படம் இருக்கலாம் என கருதப்படுகிறது.

தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டின் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா பாதிப்பு நேரத்திலும் படப்பிடிப்பை தொடங்கிய முதல் டீம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக உலகெங்கிலும் திரைப்பட படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கில் கிளம்பிய முதல் பயணிகள் ரயில்: வெளிமாநில தொழிலாளர்களுக்கு விமோசனம்

ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் சிக்கியிருந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு

ராயபுரத்தில் பின்னுக்கு தள்ளிய திருவிக நகர்: மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு

கொரோனாவுக்கு எதிரான போரில் தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் சென்னையில் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக சுகாதாரத்துறை திணறி வருகிறது.

உழைப்பால் கிடைக்கும் உயர்வு தாமதமாகலாம், தடைபடாது: கமல்ஹாசனின் மே தின டுவீட்

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் தேதி மே தின கொண்டாட்டம் நடைபெறும் நிலையில் இந்த கொரோனா பரபரப்பிலும் பல நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் மே தின கொண்டாட்டம் ஆங்காங்கே

இந்தியாவில் 35 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1793 பேர்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 33,610 லிருந்து 35,403ஆக அதிகரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 1793 பேர்கள் கொரோனாவால்