படப்பிடிப்பு முடியும் முன்பே ரூ.80 கோடி வியாபாரமா? தனுஷ் அடுத்த படத்தின் ஆச்சரிய தகவல்!

  • IndiaGlitz, [Thursday,October 20 2022]

தனுஷ் நடித்து வரும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே அந்த படம் ரூபாய் 80 கோடிக்கும் அதிகமாக வியாபாரம் ஆகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

தனுஷ் நடிப்பில் உருவான ’திருச்சிற்றம்பலம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றதை அடுத்து அவருடைய அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விரைவில் வெளியாக இருக்கும் ’வாத்தி’ திரைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தனுஷ் நடித்து வரும் திரைப்படம் ’கேப்டன் மில்லர்’. தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் உருவாகும் இந்த பான் - இந்திய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்தப் படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்றும் ஒரு பக்கா பான் இந்தியா படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் உள்பட தற்போது 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வியாபாரம் ஆகி விட்டதாக வெளியான தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தனுஷின் திரையுலக வாழ்வில் இந்த படம் மிகப்பெரிய சாதனை வசூல் சாதனை செய்யும் பச்மாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.