தனுஷின் அடுத்த படம்.. தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,September 17 2024]

தனுஷின் 50வது திரைப்படமான ராயன் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதற்குப் பின், அவர் தனது 51வது படமான குபேரன் படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில், தனுஷின் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், தனுஷின் 52வது படத்தை தயாரிப்பதில் பெருமை கொள்கிறோம், நடிப்பு அரசன் தனுஷ் எங்கள் நிறுவனத்தில் நடித்தது நாங்கள் பெருமையாக கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளது.

மேலும், எங்கள் நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட தனுஷுக்கு நன்றி. இதுவொரு புதிய பயணத்தின் தொடக்கம் என்று டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் கூறியுள்ளார்.

இந்த படத்தில் தனுஷுடன் அருண் விஜய், நித்யா மேனன், அசோக் குமார், ஷாலினி பாண்டே போன்ற பலர் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும், இப்படத்தை தனுஷ் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

ஓடிடியில் திரையரங்குகளில் வெற்றி பெற்ற,  'டிமான்ட்டி காலனி 2'. எந்த ஓடிடி? என்ன தேதி?

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட தமிழ் திகில் ஹாரர் கிளாசிக்  இரண்டாம் பாகமான  'டிமான்ட்டி காலனி 2' திரைப்படம்,  வரும் செப்டம்பர் 27 அன்று

இது என்ன நாட்டுக்கு முக்கியமான விஷயமா?  வேடிக்கை பார்ப்போம்.. மணிமேகலை பிரச்சனை குறித்து விஜய் டிவி பிரபலம்..!

'குக் வித் கோமாளி'  நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை திடீரென விலகிய நிலையில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த சூழலில்,

'மூன்று முடிச்சு' தொடரில் இணையும் இன்னொரு பிரபல நடிகை.. எகிறுமா டிஆர்பி?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "மூன்று முடிச்சு" தொடர், தொடங்கிய இரண்டே வாரங்களில் டிஆர்பியில் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது. மேலும், தற்போது

இன்று பெரியார், மோடி பிறந்த நாள்.. விஜய் வாழ்த்து சொன்னது யாருக்கு தெரியுமா?

இன்று தந்தை பெரியார் மற்றும் பிரதமர் மோடி ஆகிய இருவருக்கும் பிறந்த நாள் என்ற நிலையில், விஜய் தனது சமூக வலைத்தளத்தில் ஒருவருக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2ஆம் பாகமாகிறது மாரி செல்வராஜின் சூப்பர் ஹிட் படம்..அவரே தெரிவித்த தகவல்..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "வாழை" திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகம் முழுவதும் இப்படம் மிகப்பெரிய வசூலை குவித்தது