'கேப்டன் மில்லர்' படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரசிகர்கள் உற்சாகம்..!

  • IndiaGlitz, [Monday,November 20 2023]

தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்’ என்ற படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்றுமுன் தனுஷ் மாஸ் அப்டேட் ஒன்றை கொடுத்த நிலையில் ரசிகர்கள் உற்சாகம் ஆகியுள்ளனர்.

தனுஷ் தனது சமூகவலைதள பக்கத்தில் ’கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரம் 22ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து 22ஆம் தேதி வெளியாகும் சிங்கிள் பாடலை கேட்க தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிவி பிரகாஷ் காம்போஸ் செய்துள்ள ‘கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்’ என்ற இந்த பாடல் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடித்துள்ளார் என்பதும் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் இந்த படத்தின் நடிப்பு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

விஜய்சேதுபதியுடன் மீண்டும் இணையும் இயக்குனர்.. 3 பிரபலங்களுடன் வேற லெவல் ஸ்கிரிப்ட்..!

விஜய் சேதுபதி நடித்த இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மீண்டும் விஜய் சேதுபதி படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் 3 பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் வேற லெவல் ஸ்கிரிப்ட் தயாராகி இருப்பதாக

பிக்பாஸ் வீட்டில் ரீஎண்ட்ரி ஆவது இந்த மூன்று போட்டியாளர்களா? நிக்சனுக்கு ஒரு ஆப்பு இருக்குது..!

 பிக் பாஸ் வீட்டில் ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மூன்று போட்டியாளர்கள் ரீஎண்ட்ரியாக போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த மூன்று போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. அவர்கள்

நான் அழுவதற்கான காரணம் என் குழந்தைகளுக்கு புரியவில்லை: செல்வராகவன் உருக்கம்..!

 நான் அழுவதை பார்த்து நான் அழுவதற்கு காரணம் என்ன என்று என் குழந்தைகளுக்கு புரியவில்லை என்றும்  தந்தை அழுது அவர்கள் பார்த்ததில்லை என்றும் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில்

த்ரிஷா குறித்து சர்ச்சை பேச்சு.. மன்சூர் அலிகான் மீது அதிரடி நடவடிக்கை..!

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்ய தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  

பிரதீப் மீண்டும் உள்ளே வருகிறாரா? பிக்பாஸ் அறிவிப்பால் அதிர்ச்சியாகும் போட்டியாளர்கள்..!

 பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை எலிமினேஷன் செய்யப்பட்டவர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர். இந்த நிலையில் மேலும் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ்