close
Choose your channels

தனுஷ் இயக்கும் 4வது படத்தின் டைட்டில் இதுவா? யார் யாரெல்லாம் நடிக்கின்றனர்?

Monday, September 16, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் இதுவரை மூன்று படங்கள் இயக்கியுள்ள நிலையில் அவர் இயக்க இருக்கும் நான்காவது படத்தின் டைட்டில் மற்றும் அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது.

’பா.பாண்டி’ மற்றும் ’ராயன்’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ள தனுஷ், தற்போது ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், விரைவில் ரிலீஸ் ஆகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்ததாக, தனுஷ் இயக்கும் நான்காவது படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அருண் விஜய் வில்லனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும், ’திருச்சிற்றம்பலம்’ படத்திற்கு பிறகு நித்யா மேனன் மீண்டும் தனுஷுடன் இணைந்து நடிக்க இருக்கிறார். அசோக் செல்வன், சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

’இட்லி கடை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, ஏற்கனவே அவர் இரண்டு பாடல்கள் கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

அறிமுக தயாரிப்பாளர் ஆகாஷ் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தமே இல்லாமல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment