கிரேஸி மோகன் குறித்த பதிவிற்கு வருத்தம் தெரிவித்த தனுஷ் தந்தை!
- IndiaGlitz, [Tuesday,June 11 2019]
நடிகர், வசனகர்த்தா, நாடக ஆசிரியர் கிரேசி மோகன் நேற்று காலமானதை அடுத்து திரையுலகமே சோகக்கடலில் மூழ்கியிருந்தது. திரைலகினர் அனைவரும் கிரேஸி மோகனுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனுஷ், செல்வராகவன் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'கிரேஸி மோகன் என்பதற்கு பதிலாக லூஸ்மோகன் என்று பதிவு செய்திருந்தார். லூஸ் மோகனும் நகைச்சுவை நடிகர் என்பதால் அவர் குழப்பம் அடைந்திருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் பலர் அவருடைய தவறை சுட்டிக்காட்டியவுடன் தன்னுடைய தவறுக்கு வருத்தம் தெரிவித்த கஸ்தூரி ராஜா, தன்னுடைய தவறை சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.