விவாகரத்தில் தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு உடன்பாடு இல்லையா? நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

  • IndiaGlitz, [Tuesday,October 08 2024]

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சட்டப்படி பிரிய குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது இருவருமே ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, இருவருக்கும் விவாகரத்துக்கு உடன்பாடு இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

நடிகர் தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் காதலித்த நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கின்ற நிலையில், திடீரென 2022 ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு முடிவு செய்தனர். இதனை தங்களது சமூக வலைதளத்தில் உறுதி செய்த நிலையில், இருவருக்கும் இடையே சுமுக பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பு வீட்டிலிருந்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் முறைப்படி விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடிய நிலையில், இந்த வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால், ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், இந்த வழக்கை அக்டோபர் 19 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அக்டோபர் 19 ஆம் தேதி இருவரும் ஆஜராகவில்லை என்றால், இருவருக்கும் பிரிய மனம் இல்லையா என்ற கேள்வி எழும் என்று கூறப்படுகிறது.

More News

'சுந்தரி' சீரியல் நடிகைக்கு குருவாயூரில் திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சன் டிவியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியலில் நடித்த நடிகைக்கு குருவாயூரில் நேற்று திருமணம் நடந்த நிலையில், இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

நீ முடிவு பண்ண தேவையில்லை.. ஜாக்குலின் - பவித்ரா பயங்கர மோதல்.. என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டில்?

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், முதல் நாளே பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரண்டாவது நாளில் மிகப்பெரிய சண்டை வந்தது

உன்னை மாதிரி கால் மட்டும் இருந்திருந்தா நானும் ஆட்டோ ஓட்டியிருப்பேன்: கவினின் 'பிளடி பெக்கர்' டீசர்.!

கவின் நடித்த 'பிளடி பெக்கர்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

வடிவேலு, நயன்தாரவை அடுத்து தெலுங்கு ஹீரோ தான்.. சுந்தர் சியின் அதிரடி திட்டம்..!

'அரண்மனை 4' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பிசியாகி உள்ள சுந்தரி சி அடுத்தடுத்து படங்களை இயக்கி வரும் நிலையில், அவர் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்தாராவின் 80 நிமிட டாக்குமெண்டரி பிலிம்.. நெட்பிளிக்ஸ் சூப்பர் அறிவிப்பு..!

நடிகை நயன்தாராவின் 80 நிமிட டாக்குமெண்டரி படம் விரைவில் வெளியாக இருப்பதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.