'ரத்தக்களறி யுத்தம் தொடங்கிவிட'.. விஷால் படத்திற்காக தேவிஸ்ரீ பிரசாத் கம்போஸ் செய்த பாடல்..!

  • IndiaGlitz, [Monday,January 01 2024]

விஷால் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ’ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் கம்போஸ் செய்துள்ள இந்த அதிரடி பாடலை விவேகா எழுதியுள்ளார் என்பதும் செண்பகராஜ் பாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அட்டகாசமான வரிகளுடன் அதிரடி பின்னணி இசையுடன் கூடிய இந்த பாடல் முதல் முறை கேட்கும்போது அட்டகாசமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவில், பாலாஜி கலை இயக்கத்தில், ஜெ படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று வெளியாகியிருக்கும் பாடலின் முதல் சில வரிகள் இதோ:

ரத்தக்களறி யுத்தம் தொடங்கிவிட
சித்தம் பதறி மொத்தம்
நித்தம் எதிரி சத்தம் அலறவிட
பித்தம் தெளியவே பித்தம் தெளியவே

எட்டு திசையும் தட்டி திறந்துவிடு
முட்டும் பகையை வெட்டி சரியவிடு
கோட்டம் தணியவிட கொட்டிக் குமியவிடு
முற்றும் அதிரவே முற்றும் அதிரவே

\