'கோட்' முதல் நாள் வசூலை முறியடித்ததா 'தேவாரா? ஒரே நாளில் இத்தனை கோடியா?

  • IndiaGlitz, [Saturday,September 28 2024]

ஜூனியர் என்டிஆர் நடித்த ‘தேவாரா’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்பில் அனிருத் இசையில் உருவான ‘தேவாரா’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன என்பதும் இந்த படம் ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்னர் ‘தேவாரா’ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படம் முதல் நாளில் 172 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் முதல் நாளில் 126. 32 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், அதைவிட சுமார் 46 கோடி ரூபாய் ‘தேவாரா’ அதிகமாக வசூல் செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் நிகழ்ச்சியால் முடிவுக்கு வரும் 4 சீரியல்கள்.. பார்வையாளர்கள் அதிருப்தி..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் காரணமாக சில சீரியல்களை விஜய் டிவி நிர்வாகம் முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மாதம்பட்டி ரங்கராஜ் கன்னத்தில் பளார் பளாரென அடித்த நடிகை.. வைரல் வீடியோ..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான மாதம்பட்டி ரங்கராஜ் 'மிஸ் மேகி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜே சித்ரா வழக்கில் கணவர் விடுதலை.. தந்தை எடுத்த அதிரடி முடிவு..!

சின்னத்திரை நடிகை சித்ரா மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சித்ராவின் தந்தை எடுத்த அதிரடி முடிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார் பந்தயத்தில் கலந்து கொள்வது மட்டுமல்ல.. அஜித் குறித்து சுரேஷ் சந்திரா கூறிய வேற லெவல் தகவல்..!

நடிகர் அஜித் ஐரோப்பாவில் நடைபெறும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் இந்த போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்

என்னுடைய கடைசி காலம் வரை நடிப்பனு ஜோசியர் சொன்னார் .. . வெண்ணிறஆடை மூர்த்தி

நகைச்சுவை உணர்வுக்கு இவர்தான் டெப்போ, இரட்டை வசன அர்த்தங்களுக்கு முகவரி , இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டவர்.