வெள்ளத்தில் சிக்கிய 'தேவ்' படக்குழுவினர்களுக்கு என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Tuesday,September 25 2018]

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங் நடித்து வரும் 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அந்த பகுதியில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவால் படப்பிடிப்பு ரத்தாகியது என்பதை நேற்று பார்த்தோம். மேலும் 'தேவ்' படக்குழுவினர் 140 பேர் வெள்ளத்தில் சிக்கியிருந்ததாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கிய 140 பேரும் குலுமணாலியில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும், மாற்று பாதையை கண்டுபிடித்து கார் மூலம் அனைவரும் சண்டிகரை வந்தடைந்து அதன்பின்னர் அங்கிருந்து சென்னைக்கு விமானம் மூலம் பாதுகாப்பாக வந்துவிட்டதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலுமணாலியில் நிலைமை சீரானதும் மீண்டும் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அல்லது தயாரிப்பாளர், இயக்குனர் கலந்தாலோசித்து வேறு இடத்திற்கு படப்பிடிப்பை மாற்ற வாய்ப்புள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

More News

காதலும் நட்பும்: ஐஸ்வர்யாவை தூக்கி நிறுத்த படாதபாடு படும் பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும் நிலையில் வீட்டின் உள்ளே இருக்கும் நான்கு பேரை வைத்து ஒன்றரை மணி நேர நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியாது என்பதால்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: கோபி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடந்த 2000ஆம் ஆண்டு சந்தனக்கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார்.

ஐஸ்வர்யாவை நல்லவராக்கும் முயற்சியில் பிக்பாஸ் செய்யும் தந்திரம்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் மூன்று நாட்களில் முடிவடைய உள்ளது. வரும் வெள்ளி அன்று இறுதிப்போட்டி நடைபெறவிருப்பதால் அன்றைய தினம் பிக்பாஸ் 2 டைட்டில் வின்னர் யார்? என்பது தெரிந்துவிடும்

காட்பாதருக்கு இணையானது 'சண்டக்கோழி 2: விஷால்

“விஷால், கீர்த்திசுரேஷ் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி 2' படத்தின் இசைவெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.

'விஸ்வாசம்' பாடல் குறித்த முக்கிய தகவல்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்களை கம்போஸ்