ரஜினிக்கு சொன்ன கதையில் தான் சிம்பு நடிக்கிறாரா? தேசிங்கு பெரியசாமி விளக்கம்..!

  • IndiaGlitz, [Friday,November 10 2023]

’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தின் வெற்றிக்கு பின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படம் தொடக்கப்படவில்லை.

இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகயிருக்கும் ’எஸ்டிஆர் 48’ என்ற படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த தேசிங்கு பெரியசாமி ரஜினிக்கு கூறிய கதையில்தான் சிம்பு நடிக்கிறார் என்றும் பெரிய அளவில் கதையிலோ அல்லது திரைக்கதையிலோ சிம்புக்காக எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறினார்.

ரஜினிக்கு அந்த கதையை கூறிய போது அவருக்கு அந்த கதை பிடித்திருந்தது, ஆனால் அந்த படம் எதிர்பாராத காரணத்தினால் தொடங்கப்படவில்லை. அதே கதையை நான் சிம்புவுடன் கூறிய போது அவர் முதல் முறை கேட்டபோது அந்த படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்த படம் ஒரு பீரியட் படமாகவும் மாஸ் மற்றும் கமர்சியல் படமாகவும் இருக்கும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என்றும் தேசிங்கு பெரியசாமி கூறினார்.

More News

பிக்பாஸ் கோர்ட் டாஸ்க் .. மாயா கேங்கை கதற வைக்கும் விசித்ரா குரூப்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் சக போட்டியாளர்கள் மீது வழக்கு தொடக்கலாம்

நான் பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் செல்ல 2 கண்டிஷன்கள்: அதிர்ச்சி கொடுத்த பிரதீப்..!

 பிக் பாஸ் வீட்டில் இருந்து பிரதீப் வெளியேற்றப்பட்டது அநியாயம் என்று  பிக் பாஸ் வீட்டில் உள்ள சில போட்டியாளர்கள் மட்டுமின்றி வெளியே இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும்

உடம்புல ரத்தம் சூடா இருக்குற வரைக்கும் தான் சண்டை செய்ய முடியும்: கருப்பர் நகரம் டீசர்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த 'அறம்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் அடுத்த படம் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் டைட்டில் 'கருப்பர் நகரம்' என வெளியானது

கமல் சார் உங்க டீமா? மறைமுகமாக கேட்ட தினேஷ்..! மாயாவின் அபார நம்பிக்கை..!

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வரும் கமல்ஹாசன் மீதே தற்போது  மாயா கேங்கிற்கு பயமில்லாமல் போய்விட்டது என்பது அவர்கள் பேசும் பேச்சில் இருந்து தெரிய வருகிறது.

எத்தனை ஹிட் கொடுத்தோம் என்பது முக்கியமில்லை.. மீண்டு வருவது தான் முக்கியம்: சமந்தா எமோஷனல் பதிவு..!

திரையுலகில் ஒரு நடிகரோ நடிகையோ எத்தனை ஹிட் கொடுத்தார்கள் என்பது முக்கியமில்லை, கஷ்டங்களில் இருந்து அவர் மீண்டு வந்தாரா என்பது தான் முக்கியம் என நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்