close
Choose your channels

கீரிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா??? தடுப்பூசி கண்டுபிடிப்பில் அடுத்த சிக்கல்!!!

Monday, November 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கீரிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா பரவுகிறதா??? தடுப்பூசி கண்டுபிடிப்பில் அடுத்த சிக்கல்!!!

 

முன்னதாக மனிதர்களைத் தவிர சில விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி இருந்தனர். ஆனால் கொரோனா வைரஸால் மனிதர்களின் உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏப்டுவதைப் போல விலங்குகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதையும் விஞ்ஞானிகள் தெளிவுப்படுத்தி இருந்தனர். ஆனால் தற்போது உலகிலேயே முதல் முறையாக டென்மார்க்கில் கொரோனா வைரஸ் கீரிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. இது கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

டென்மார்க்கில் உணவுத் தேவைக்காக மினிக் எனப்படும் ஒருவகை கீரிகள் அந்நாட்டின் பல்வேறு பண்ணைகளில் வைத்து வளர்க்கப்பட்டு வருகின்றன. அப்படி வளர்க்கப்படும் கீரி இறைச்சி சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கீரிகள் வளர்க்கப்படும் ஒரு பண்ணையில் வேலைப் பார்த்த 213 ஊழியர்களுக்கு திடீரென கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஊழியர்களுக்கு ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்று பரவலை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதிர்ச்சி ஏற்படுத்தும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

அதில் மினிக் வகையின கீரிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கீரிகள் மனிதர்களுக்கும் நோய்த்தொற்றை ஏற்படுத்துவதும் தெரியவந்துள்ளது. இதற்குமுன் புலி, நாய், சிங்கம், பூனை போன்ற விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தாலும் அந்த விலங்குகள் மனிதர்களுக்க நோய்த்தொற்றை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த முறை கீரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதுமேலும் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை பரப்பி வருகிறது.

இதனால் அதிர்ந்து போன டென்மார்க் அரசாங்கம் அந்நாட்டில் செயல்பட்டு வரும் 213 கிரீ வளர்க்கும் பண்ணைகளில் உள்ள 1 கோடியே 7 லட்சம் கீரிகளை கொன்றுவிடுமாறு உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் கொரோனா பரவலைத் தடுக்க இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருப்பதாகவும் அந்நாட்டு அரசாங்கம் உறுதி அளித்து உள்ளது. கடந்த ஜனவரியில் ஆரம்பித்த கொரோனா நோய்த்தொற்றுக்கு 10 மாதங்களைக் கடந்த பின்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வில்லை. இந்நிலையில் விலங்குகள் மனிதர்களுக்கு நோய்த்தொற்றை பரப்புவது மேலும் தடுப்பூசி கண்டுபிடிப்பில் சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment