'டிமாண்ட்டி காலனி 2' படத்தின் வசூல் இத்தனை கோடியா? பட்ஜெட்டை விட இருமடங்கு வசூலா?

  • IndiaGlitz, [Friday,August 30 2024]

அருள்நிதி நடித்த ’டிமாண்ட்டி காலனி 2’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டு வார வசூல் குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ’டிமாண்ட்டி காலனி ’படத்தின் இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விருந்தாக வெளியானது.

இந்த படத்தில் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்த நிலையில் இந்த படம் தற்போது இரண்டு வாரங்களில் 55 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை புதிய போஸ்டர் உடன் அருள்நிதி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 30 கோடி ரூபாய் என்று கூறப்பட்ட நிலையில் பட்ஜெட்டை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வசூல் செய்திருப்பதை அடுத்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கல்கி' 2ஆம் பாகம் வெளியாக இத்தனை வருடங்கள் ஆகுமா? ரசிகர்கள் அதிருப்தி..!

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்த 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது.

அனைத்து பணிகளும் முடிந்தது.. 'கோட்' படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட வெங்கட் பிரபு..!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'கோட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சென்சார் சான்றிதழ் பெற்று விட்டது என்பது தெரிந்தது.

தல அஜித்தை வைத்து பைக் ஓட்ட ஆசை... லைலா...

நடிகையாக கள்ளழகர் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர். பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனம் வென்றவர்.

புதுவையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 புரமோ படப்பிடிப்பா? அப்ப இந்த நடிகர் கமிட் ஆகிவிட்டாரா?

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் புரமோ புதுவையில் படமாக்கப்பட இருப்பதாகவும் இதற்காக பிரபல நடிகர் தேதி கொடுத்திருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை பாலியல் புகார்.. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு.. பிரபல நடிகர் கைதா?

நடிகை அளித்த பாலியல் புகார் காரணமாக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.