இதுவரை வாரம் ரூ.24,000. இனிமேல் அப்படி இல்லை. ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,November 29 2016]

ரூ.500 ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்பு வெளிவந்தவுடன் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவும் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு விதித்தது. அதாவது ஒருவர் தனது வங்கியில் எத்தனை கோடி இருந்தாலும் வாரத்திற்கு ரூ.24,000 மட்டுமே எடுக்க முடியும் என்பதே அந்த கட்டுப்பாடு
ஆனால் தற்போது 1ஆம் தேதி நெருங்கிவிட்டதால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது உள்பட பல்வேறு செலவுகள் இருப்பதை கருத்தில் கொண்ட ரிசர்வ் வங்கி தற்போது இந்த கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளது. இதன்படி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையிலிருந்து எவ்வளவு தொகை வேண்டுமானாலும் ,வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் இருந்து வங்கியில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500, மற்றும் ரூ.2000 நோட்டாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பால் பெரிய தொகைகளை வங்கியில் இருந்து எடுக்க முடியாமல் திணறியவர்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக வெகுவிரைவில் நாட்டில் இயல்பு நிலை திரும்பிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கமல்-மெளலியின் 'மெய்யப்பன்' செய்தி மெய்யா? பொய்யா?

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது நடித்து இயக்கி வரும் 'சபாஷ் நாயுடு' படத்தை அடுத்து ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் மெளலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளிவந்தது.

விஜய்-அட்லி படப்பிடிப்பு தொடங்குவது எப்போது?

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ரசிகர்களுக்கு சிம்பு தரும் கிறிஸ்துமஸ் விருந்து

சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் சென்னை உள்பட அனைத்து பகுதிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து சிம்புவின் அடுத்த படமான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமன்னாவுடன் இணையும் சுஹாசினி-ரேவதி

பிரபுதேவாவுடன் தமன்னா நடித்த 'தேவி' மூன்று மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் 'பாகுபலி 2'...

கே.வி.ஆனந்த் மீது 'கவண்' நடிகர்கள் செய்த புகார்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'கவண்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது...