தமிழ் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி டெல்லி மாடல் அழகிகளை ஏமாற்றிய கும்பல்!
- IndiaGlitz, [Sunday,January 10 2021]
தமிழ் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட 2 மாடல் அழகிகள் சென்னையில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திடீரென காவல்துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது ஒரு அறையில் இரண்டு இளம்பெண்களும் இரண்டு வாலிபர்களும் இருப்பதை அறிந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்
அப்போது அந்த இரண்டு இளம்பெண்களும் டெல்லியை சேர்ந்த மாடல் அழகிகள் என்றும் அவர்களிடம் தமிழ் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சென்னை அழைத்து வரப்பட்டதாகவும் தெரியவந்தது. மேலும் இந்த இரண்டு பெண்களை வைத்து விபச்சாரம் செய்ய திட்டமிட்டதாக விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து அந்த அறையில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவர் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த செந்தில் என்றும் இன்னொருவர் கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பதும் விசாரணையில் தெரியவந்தது
இதனை அடுத்து மீட்கப்பட்ட 2 பெண்களும் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது., இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இரண்டு மாடல் அழகிகளை டெல்லியில் இருந்து அழைத்து வர உதவிய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது