கமல்ஹாசனுக்கு நன்றி கூறிய முதலமைச்சர்: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,June 14 2018]

உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் நல்ல நட்பு உண்டு என்பதும், கமல்ஹாசன், 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கிய தினத்தன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை நிலை ஆளுனர் இல்லத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் முதல்வரின் உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பதே அவரது தர்ணா போராட்டத்திற்கு காரணமாக உள்ளது.

இந்த நிலையில் ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவதை ஏற்க முடியாது என்றும், டெல்லியில் நடப்பதற்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடப்பதற்கும் வித்தியாசம் இல்லை என்றும் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் கருத்துக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'டெல்லி மக்களுக்கு நான் தொடர்ந்து சேவை செய்ய நமது பிரதமர் அனுமதிப்பார் என்று நம்புகிறேன். பொதுமக்களுக்கு சேவை செய்வதை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More News

3013ஆம் ஆண்டுக்கு டிக்கெட் கொடுத்த ரயில்வே துறைக்கு அபராதம்

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒரு ரயில் பயணிக்கு 3013ஆம் ஆண்டுக்கான டிக்கெட்டை ரயில்வே நிர்வாகம் தவறாக கொடுத்திருந்தது. அந்த பயணியிடம் சரியான டிக்கெட் இல்லை

ஹாட்ரிக் அடிக்கும் தீவிர முயற்சியில் நடிகை சாயீஷா

இயக்குனர் விஜய் இயக்கிய 'வனமகள்' என்ற ஒரே தமிழ் படத்தில் நடித்திருந்தாலும் கோலிவுட் திரையுலகின் இன்றைய  ஹாட் டாக் நடிகை சாயீஷாதான்.

கேரளாவில் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் 30 விஜய் படங்கள்

தளபதி விஜய் பிறந்த நாளுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் இந்த ஆண்டு விஜய் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

தென்னிந்திய நடிகைகளை விபச்சாரத்தில் தள்ளிய தொழிலதிபர் அமெரிக்காவில் கைது

இந்திய தொழிலதிபர் ஒருவர் அமெரிக்காவில் தென்னிந்திய நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபட வைத்த குற்றத்திற்காக அமெரிக்க போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

ரஜினிகாந்த்-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த புதுமாப்பிள்ளை நடிகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு இமயமலை அருகே விறுவிறுப்புடன் நடந்து வருகிறது