தலைநகர் டில்லியில் திடீர் குண்டுவெடிப்பு…  இஸ்ரேல் தூதரம் அருகே நிகழ்ந்ததால் பதற்றம்!!!

  • IndiaGlitz, [Friday,January 29 2021]

இன்று (29.01.2021) மாலை தலைநகர் டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே திடீர் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தை அடுத்து தலைநகர் டெல்லியில் கடும் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே விவசாயப் போராட்டங்களினால் நெருக்கடியில் சிக்கியிருக்கும் டெல்லி தற்போது குண்டு வெடிப்பை சந்தித்து இருக்கிறது.

இச்சம்பவத்தில் 4 கார்கள் சேதம் அடைந்து உள்ளதாக டெல்லி போலீசார் தகவல் வெளியிட்டு உள்ளனர். மேலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதையும் டெல்லி போலீஸ் உறுதிப்படுத்தி இருக்கின்றது. இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதிக்கு அருகே அப்துல்கலாம் சாலையில் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. மேலும் இந்த விபத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு குறித்த விசாரணையைத் தற்போது நிபுணர்கள் தொடங்கி உள்ளனர்.

விவசாயிகள் கடந்த 26 ஆம் தேதி டெல்லியில் பெரிய டிராக்டர் பேரணியை தொடங்கினர். இந்த பேரணியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து ஒட்டு மொத்த டெல்லியிலும் 144 தடை சட்டம் கொண்டு வரப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய பரபரப்புக்கு இடையே இன்று மாலை வெடிகுண்டு விபத்து நடைபெற்று இருக்கிறது. இதனால் விவசாயப் போராட்டம் கேள்விக்குறியாகி விடுமோ? என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது நடைபெற்ற வெடிகுண்டு விபத்து எதனால் நடைபெற்றது? இதற்கு காரணம் யார்? என்பது குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாக வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இச்சம்பவம் டெல்லி மக்கள் மத்தியில் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

More News

ஹரி-அருண்விஜய் படத்தின் அடுத்த ஆச்சரிய அப்டேட்!

பிரபல இயக்குனர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் இணையும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் அருண்விஜய்யின் 33வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில்

'கே.ஜி.எஃப் 2' ரிலீஸ் தேதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம்

இந்த டீம் கூட சேராதீங்க, மோசமானவங்க: நெட்டிசனின் பதிவுக்கு பதிலடி கொடுத்த அனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சி 105 நாட்களாக நடைபெற்றது என்பதும் சமீபத்தில் முடிவடைந்த இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரியும், ரன்னராக பாலாஜியும் தேர்வு பெற்றனர் என்பது தெரிந்ததே 

நடிகர்களாக மாறிய பிரபல பாடகர்கள்: குஷ்புவின் அறிவிப்பு!

தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக நடிகர்கள் மட்டுமின்றி பாடகர்கள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் நடிகர்களாக மாறி வருகின்றனர்

சூர்யாவை அடுத்து வெப்தொடரில் நடிக்கும் பிரபல ஹீரோ: டைட்டில் அறிவிப்பு!

திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் தற்போது வெப்தொடர் பக்கம் திரும்பி உள்ளனர் என்பதும் அதேபோல் வெற்றிமாறன், கெளதம் மேனன், மணிரத்னம் உள்பட பல முன்னணி