'விவாகரத்து இல்லாமல் சந்தோஷமான வாழ்க்கை.. தீபிகா படுகோனே கொடுத்த டிப்ஸ்..!

  • IndiaGlitz, [Tuesday,August 08 2023]

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது கணவர் ரன்வீர் சிங்கை விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வரும் நிலையில் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து தீபிகா படுகோனே பிற நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது அவரது கணவருக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. அதுமட்டுமின்றி ஒரு நிகழ்ச்சியில் ரன்வீர் கையை பிடிக்காமல் தீபிகா படுகோனே உதறி விட்டு சென்ற வீடியோவும் வைரலானது.

இந்த நிலையில் தீபிகா தனது கணவரை விவாகரத்து செய்ய போகிறார் என்று வதந்தி பரவி கொண்டிருக்கும் நிலையில் அவர் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார்.

அதில் ’உங்களை எல்லாவிதத்திலும் சிரிக்க வைக்கக்கூடிய, வாழ்க்கையை அழகாக்க கூடிய உங்கள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை நானும் ரன்வீர் சிங்கும் வாழ்வது போல் மகிழ்ச்சியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் அவர் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியலை'.. ஜிவி பிரகாஷின் 'அடியே' டிரைலர்..!

ஜிவி பிரகாஷ் நடிப்பில், விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவான 'அடியே' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'லியோ' இரண்டாம் பாகம் உருவாகிறதா? 2ஆம் பாகத்தின் டீசர் ரிலீஸ் தேதி இதுவா?

தளபதி விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகயிருக்கும் நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக கூறப்படுவது

அட்லியின் அடுத்த படத்தில் செல்வராகவன் பட ஹீரோயின்..!

அட்லியின் அடுத்த படத்தில் செல்வராகவன் படத்தில் நடித்த நடிகை நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

உங்கள் இரண்டு கண்களும் எனக்கு அவ்வளவு பிடிக்கும்: பகத் பாசிலுக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து..!

நடிப்பு அரக்கன் பகத் பாஸில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் 'மாமன்னன்' இயக்குனர் மாரி செல்வராஜ் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் அவர் கூறியிருப்பதாவது

விஜய்-சூர்யா இணைந்து நடித்த படத்தின் இயக்குனருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

விஜய், சூர்யா இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.