தென்னிந்திய ஹீரோவுக்கு ஜோடியாகும் தீபிகா படுகோனே: பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Thursday,March 05 2020]

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தீபிகா படுகோனே ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கோச்சடையான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு தென்னிந்திய ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி', 'பாகுபலி 2’ சூப்பர் ஹிட் படங்களில் நடித்த பிரபாஸ் தற்போது ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிக்கும் 21வது படத்தை நாக் அஸ்வின் என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடித்த ’நடிகையர் திலகம்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் இந்த திரைப்படத்தில் நாயகியாக தீபிகா படுகோனே நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பது குறித்து தீபிகா படுகோனேவிடம் நாக் அஸ்வின் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த படத்தின் கதை மற்றும் தன்னுடைய கேரக்டர் குறித்து கேட்ட தீபிகா படுகோனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் தெலுங்கு திரைப்படத்தில் முதன்முதலாக தீபிகா படுகோனே நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வரலாற்றிலேயே முதன்முறையாக 3 பெண் நீதிபதிகள் ஒன்றாக அமர்ந்து விசாரணை 

சென்னை உயர் நீதிமன்றத்தின் 150 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக 3

நடிகை சன்னி லியோனின் மேஜிக் – வைரலாகும் வீடியோ

எப்போதும் ரசிகர்களைப் பரபரப்பாகவே வைத்திருக்கும் சன்னி லியோன் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை மேஜிக் காட்டி அறிவித்து இருக்கிறார்.

மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி எச்சரிக்கை: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் நிலையில் இன்று காலை ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை அவர் சந்தித்தார் என்பது தெரிந்ததே

தாய்ப் பாசம்.. 10 அடி பாம்புடன் சண்டையிட்ட மரங்கொத்தி..! வைரல் வீடியோ.

சீரும் பாம்பானது மரங்கொத்தியை கடிக்கிறது, தாக்கப்பட்டவுடன் கீழே விழும் மரங்கொத்தி மீண்டும் பறந்து வந்து பாம்பை தாக்குகிறது.

"கொரோனா வைரஸைத் தடுக்க கோமியம் பார்ட்டி நடத்தவுள்ளோம்"..! இந்து மகா சபா தலைவர்.

இது டீ பார்ட்டி போல் நடத்தப்படும் எனவும் இங்கு கோமியமும், மாட்டுச்சாணம், பால் போன்றவையும் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துளளார்.