கர்ப்பமான நிலையில் ஓட்டு போட வந்த தீபிகா படுகோன்.. வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

  • IndiaGlitz, [Monday,May 20 2024]

நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமான நிலையில் தனது கணவருடன் வந்து ஓட்டு போட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருவதை எடுத்து அவர் குறித்து எழுந்து வரும் வதந்திக்கும் முற்றுப்புள்ளி விட்டதாக கூறப்படுகிறது.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன் என்பதும் அவர் ’கல்கி 2898 ஏடி’ உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை தீபிகா படுகோன் கடந்த பிப்ரவரி மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, செப்டம்பர் மாதம் குழந்தை பிறக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.

ஆனால் அதே நேரத்தில் தீபிகா கர்ப்பம் என்று அறிவித்த பிறகு அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை என்பதால் அவர் கர்ப்பமாக இருக்கும் எந்த புகைப்படம் வெளியாகவில்லை. இந்த நிலையில் இன்று மகாராஷ்டிராவில் ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தீபிகா படுகோன் தனது கணவர் ரன்வீர் சிங் உடன் ஓட்டு போட வந்திருந்தார்.

தீபிகா படுகோன் தற்போது நான்கு மாத கர்ப்பம் என்ற நிலையில் அவரை பேபி பம்ப் உடன் பார்த்த பத்திரிகையாளர்கள் புகைப்படங்கள் எடுத்த நிலையில் அவை இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் பத்திரிகையாளர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஆகிய இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதையடுத்து பிரிய போவதாகவும் வதந்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஓட்டு போட வந்திருப்பதை அடுத்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகவே கருதப்படுகிறது.

 

More News

5 மொழிகளில் ரீமேக் ஆகும் ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. அதில் ஒன்று சர்வதேச மொழி..!

பிக் பாஸ் பிரபலம் ஹரிஷ் கல்யாண் நடித்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஒரு சர்வதேச மொழி உள்பட ஐந்து மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல நடிகை தீபா: குல தெய்வ பக்தி, ஆன்மீக அனுபவங்கள் பகிர்வு!

பிரபல சினிமா நடிகை தீபா அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது குல தெய்வ வழிபாடு, ஆன்மீக அனுபவங்கள் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

மாடியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை: சமூகவலைத்தள விமர்சனம் காரணமா?

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் மாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்ட நிலையில் அந்த குழந்தையின் தாய் மீது சமூக வலைதளங்களில்

சுசித்ரா கூறிய போதை குற்றச்சாட்டு.. விஜய், தனுஷ், த்ரிஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜலட்சுமி

கடந்த சில நாட்களுக்கு முன்னால் பாடகி சுசித்ரா திரையுலக பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பேட்டி ஒன்றில் கூறிய  நிலையில் அவர் கூறிய திரை உலக பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

தாய் தெய்வ வழிபாட்டின் சிறப்புகள்: சிவ சதீஷ்குமார் அவர்களின் பேட்டி

ஆன்மீக பேச்சாளர் சிவ சதீஷ்குமார் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தாய் தெய்வ வழிபாட்டின் சிறப்புகள் பற்றியும், பல்வேறு தாய் தெய்வங்களை வழிபடுவத