ஆட்டோ ஓட்டுநரின் மகள் உலகின் நெம்பர் ஒன் சாம்பியன்… இந்திய வில்வித்தையில் புது புயல்!

  • IndiaGlitz, [Tuesday,June 29 2021]

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உலகக் கோப்பை வில்வித்தை போட்டி நடைபெற்றது. இதில் ஒற்றையர், மகளிர் மற்றும் கலப்பு அணி எனும் 3 பிரிவுகளிலும் கலந்து கொண்டு தங்கத்தை குவித்து இருக்கிறார் இந்தியாவைச் சேர்ந்த தீபிகா குமாரி. அதிலும் குறிப்பாக ஒற்றையர் பிரிவில் தங்கத்தை வென்றதால் தற்போது உலகத்தின் நெம்பர் ஒன் வீராங்கனை எனும் அந்தஸ்துக்கு உயர்ந்து இருக்கிறார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் பிறந்தவர்தான் தீபிகா குமாரி. இவரின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது தாய் ஒரு செவிலியராக பணியாற்றி வருகிறார். சிறு வயதில் உறவுக்காரப் பெண் ஒருவரிடம் இருந்து மாங்காய் கொட்டைகளை வைத்து வில்வித்தை செய்யக் கற்றுக்கொண்ட இவர் நாளடைவில் வில்வித்தை மீது தீராதக் காதல் கொண்டு மூங்கில் வில் அம்புகளை வைத்து பயிற்சி பெற்று இருக்கிறார்.

இவரது ஆர்வத்தைப் பார்த்த பெற்றோர் முறையான பயிற்சி வழங்குவதற்காக கடும் சிரமப்பட்டு உள்ளனர். ஒருவழியா கடந்த 2005 வாக்கில் அர்ஜுன் வில்வித்தை பயிற்சி மையத்திலும் பின்பு டாடா வில்வித்தை பயிற்சி மையத்திலும் பயிற்சி எடுத்து இருக்கிறார். இதற்கிடையில் வீட்டிற்கே செல்லாத தீபிகா கடந்த 2009 இல் உலகக் சாம்பியன்ஷிப் பட்டத்தைப் பெற்ற பிறகே வீட்டிற்கு திரும்பினாராம்.

இப்படி வில்வித்தையில் தீவிர ஆர்வம் கொண்ட தீபிகா கடந்த 2010 காமன்வெல்த், ஆசிய விளையாட்டுகள், ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், உலகக் கோப்பை மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல எனப் பல்வேறு பதக்கங்களைக் குவித்து உள்ளார்.

ஆனால் 2012 லண்டன் ஒலிம்பிக், 2016 ரியோ ஒலிம்பிக்கில் என இரண்டிலும் சொதப்பிய தீபிகா அடுத்து வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலக்க வேண்டும் என இந்திய ரசிகர்கள் இவர்மீது அதிக எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர்.

More News

ஆபாச பேச்சு..போதை ஆட்டம்....! சில்மிஷ சிக்கா சூர்யா, சேனலுக்கு ஆப்பு வைத்த கோர்ட்...!

சமூகவலைத்தள பிரபலமான ரவுடி பேபி சூர்யாவின் யுடியூப் பக்கத்தை முடக்கவேண்டும் என, நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ரஜினிக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? கஸ்தூரி சந்தேகத்தை தீர்த்த ரஜினி தரப்பினர்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் இந்தியாவிலிருந்து கடந்த மே மாதத்தில் இருந்து அமெரிக்காவுக்கு யாரையும் அனுமதிக்கவில்லை.

கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்களின் பதில்!

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தின் சுவையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஓடிடியில் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்? வைரலாகும் போஸ்டர்!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'டாக்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையில், ஊரடங்கு காரணமாக திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வரை சந்தித்த ஆக்சன்கிங் அர்ஜூன்!

தமிழக முதல்வராக சமீபத்தில் முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பின்னர் அவரை மரியாதை நிமித்தமாக பலர் சந்தித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். பிரபல அரசியல் தலைவர்கள், தொழில்