எச்.ராஜாவிற்கு இதைவிட வேறு அவமானம் தேவையா?. நெட்டிசன்கள் கிண்டல்

  • IndiaGlitz, [Tuesday,March 06 2018]

பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை தனது முகநூலில் பெரியார் சிலையை அகற்றுவது குறித்து சர்ச்சைக்குரிய ஒரு பதிவை பதிவு செய்து கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழர்களின் வெறுப்பை சம்பாதித்துவிட்டார். அவரது கட்சியினர்களே அவர் மீது அதிருப்தி அடைந்த நிலையில் வேறு வழியின்று எச்.ராஜா தனது பதிவை நீக்கிவிட்டார்

இந்த நிலையில் எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்காத அரசியல் தலைவர்களே இல்லை என்று கூறலாம். வைகோ, சுப வீரபாண்டியன் ஆகியோர்கள் எச்.ராஜாவை எச்சரிக்கை வகையில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

இந்த நிலையில் அவ்வப்போது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தன் பங்குக்கு எச்.ராஜாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'பெரியார் மண்ணிலிருந்து பெரியார் சிலையை அகற்றி விட முடியுமா ? வெறும் சிலை இல்லை, சிங்கம் அவர்...சிலையை தொட்டால் ஏற்படும் விளைவுகள் நினைத்து பார்க்க முடியாதவை..இந்திய அளவில் திராவிடம் காத்த அம்மாவின் வாரிசு நான் வெறுமனே பார்த்து கொண்டு இருக்க மாட்டேன்.. என்று கூறியுள்ளார்.

தீபாவின் இந்த பதிவு குறித்து சமூக வலைத்தள பயனாளி ஒருவர் கூறியபோது, 'இதைத்தான் எங்கள் அண்ணன் எச்.ராஜாவுக்கு நிகழ்ந்த உச்சகட்ட அவமானமாக பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார். எச்.ராஜாவுக்கு இது தேவையா? என்று நெட்டிசன்கள் பலர் கிண்டலடித்து வருகின்றனர்.

 

More News

'காலா' குழுவினர்களுக்கு நானாபடேகர் கொடுத்த ஆச்சரியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

எச்.ராஜாவை வெளுத்து கட்டிய குஷ்பு

இன்று காலை முதல் ஊடகங்களுக்கு கிடைத்த பரபரப்பான தீனி, எச்.ராஜா தனது முகநூலில் பதிவு செய்த பெரியார் சிலை குறித்த கருத்துதான். மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு விருந்தாக

இரு இமயங்களை சமாளிப்பாரா ரஜினி? விவேக் கூறியதன் உள்ளர்த்தம் என்ன?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்துவிட்டு பேசிய நீண்ட உரை தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அனிதா கேரக்டரில் ஜூலியா? பொங்கி எழுந்த நெட்டிசன்கள்

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தமிழகம் முழுவதும் நல்ல பெயர் வாங்கிய ஜூலி, அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முதலில் ஜூலிக்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

ஆஸ்கார் விருது வாங்கிய ஒருசில நிமிடங்களில் நடிகைக்கு ஏற்பட்ட சோகம்

நேற்று அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகையாக Frances McDormand என்பவர் தேர்தெடுக்கப்பட்டு