அதிமுக கூட்டணியில் இணையாதது ஏன்? ஜெ.தீபா பேட்டி

  • IndiaGlitz, [Friday,March 15 2019]

அதிமுக, திமுக, தினகரன் கட்சி, கமல்ஹாசன் கட்சி, சீமான் கட்சி என ஐந்து முனை போட்டி வரும் நாடாளுமன்ற தேர்தலில் உருவாகியுள்ள நிலையில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெ.தீபா, 'அதிமுக கூட்டணியில் இணைய அல்லது அதிமுகவுடன் தனது கட்சியை இணைக்க கடந்த மூன்று மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளதாகவும் தீபா தெரிவித்தார்.

மேலும் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும், கள ஆய்வு செய்த பின்னரே போட்டியிடுவது குறித்த முடிவை எடுக்கவுள்ளதாகவும், ஆனால் தனது கட்சி வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவது உறுதி என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழக மக்களும் இளைஞர்களும் புதியதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் இளைஞர்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்ச்சி அதிகம் இருப்பதை தான் பல இடங்களில் பார்த்ததாகவும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தீபா தெரிவித்துள்ளார்.
 

More News

பப்ஜி விளையாடிய 6 கல்லூரி மாணவர்கள் கைது!

பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டால் இளைஞர்கள் அடிமையாவது மட்டுமின்றி மனதில் குற்றச்செயல்கள் செய்யும் அளவுக்கு மனநிலை பாதிக்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து

3வது நாளாக சிபிசிஐடி போலீசார் சோதனை: பொள்ளாச்சி வழக்கில் சிக்கிய ஆதாரங்கள் என்ன?

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில்

தமிழ் சினிமாவின் முக்கியமான ஆளுமை நபர் சூர்யா; ரஜினி பட இயக்குனர்

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து திரையுலகினர் தங்கள் ஆவேசமான கருத்துக்களை தெரிவித்திருந்தனர் என்பதை அவ்வப்போது பார்த்து வந்தோம்.

'தடம்' வெற்றியால் 'மூடர் கூடம்' இயக்குனருக்கு கிடைத்த நம்பிக்கை!

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகர் ஒரே ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட்டால் அவருடைய முந்தைய முடங்கி போன படங்கள் எல்லாம் தூசு தட்டி எழுப்பப்படும்

விஜய் ஆண்டனி படத்தில் ரீஎண்ட்ரியாகும் 'பாலா' பட நடிகை

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா பட நாயகிகளில் ஒருவர் சங்கீதா. 'பிதாமகன்' படத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.