முதல்முறையாக விவாகரத்து குறித்து மனம் திறந்த டிடி.. இந்த ஒரு காரணத்திற்காக எடுத்த முடிவு..!

  • IndiaGlitz, [Monday,April 22 2024]

விஜய் தொலைக்காட்சி பிரபலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன் கணவரை விவாகரத்து செய்த நிலையில் இந்த ஒரு காரணத்திற்காக தான் நான் விவாகரத்து செய்தேன் என நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் திறந்து பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ’காபி வித் டிடி’ ‘ஜோடி நம்பர் ஒன்’ ’சூப்பர் சிங்கர்’ ’அச்சம் தவிர்’ உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் டிடி என்ற திவ்யதர்ஷினி என்பதும் சில சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. அது மட்டுமின்றி சில படங்களுக்கு அவர் டப்பிங் குரலும் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் அவர் பிஸியாக இருந்து வரும் நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்தது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து கூறியுள்ளார்.

திவ்யதர்ஷினி கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்த நிலையில் மூன்றே ஆண்டுகளில் அதாவது 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர்.

விவாகரத்திற்கான காரணத்தை அவர் இதுவரை தெரிவிக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’அந்த சமயத்தில் நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்து தான் விவாகரத்து முடிவை எடுத்தேன், அந்த முடிவு எனக்கு கஷ்டமாக இருந்தாலும் வேறு வழியில்லாமல் தான் அந்த முடிவை எடுத்தேன் என்று கூறினார்.

நான் விவாகரத்து ஆனவர் என்பதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளவில்லை என்றாலும் நான் தான் அதை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்பதற்காக நான் வேலைகளில் பிஸியானேன் என்றும் தெரிவித்தார். திவ்யதர்ஷினி விவாகரத்தாகி ஏழு வருடங்கள் ஆகிய போதிலும் இன்னும் சிங்கிள் ஆகவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'கில்லி'யை கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்.. பதிலுக்கு ஜப்பான் விஜய் ரசிகர்களின் தரமான சம்பவம்..!

தளபதி விஜய் 20 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த 'கில்லி' திரைப்படம் கடந்த வெள்ளி அன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக புதிதாக ரிலீசான படங்களுக்கு இணையாக

'பிரேமலு' ஜோடி மாறிவிட்டதா? ஆளை மாற்றிய மம்தா பாஜூ.. செம்ம ரொமான்ஸ் வீடியோ..!

சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படமான 'பிரேமலு' தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது

வாடிவாசலுக்கு முன்பே வெற்றிமாறனின் இன்னொரு படம்.. ஹீரோ இந்த பிரபலம் தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்குவார் என்று

'ஜெய்ஹோ' பாடலை ஏஆர்  ரஹ்மான்  கம்போஸ் செய்யவில்லையா? பிரபல இயக்குனர் பேட்டியால் பரபரப்பு..!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற படத்திற்காக கம்போஸ் செய்த 'ஜெய் ஹோ' என்ற பாடல் ஆஸ்கார் விருதை வென்றது என்பதும் இதன் மூலம் தான் ஏ ஆர் ரகுமான் உலக புகழ் பெற்றார் என்பது தெரிந்தது.

நான் அதை செய்வதில்லை.. அதனால் எனக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை: மனம் திறந்த ப்ரீனிதி சோப்ரா..!

நடிகை ப்ரீனிதி சோப்ரா கடந்த 13 ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் இருக்கும் நிலையில் ஒரு சில படங்கள் மட்டுமே அவர் நடித்து இருக்கும் நிலையில் தனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு என்ன காரணம் எ