close
Choose your channels

ஏகப்பட்ட மனைவிகள்: 10க்கும் மேற்பட்ட கள்ளக்காதலிகள்: ஒரு மாற்றுத்திறனாளியின் பகீர் வாக்குமூலம்!

Wednesday, January 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பார்வையில்லாத மாற்றுத் திறனாளி ஒருவர் பல பெண்களை திருமணம் செய்தும் பத்துக்கும் மேற்பட்ட கள்ளக்காதலிகளிடம் உல்லாசமாக இருந்து வந்துள்ளதும் அவரது வாக்குமூலத்தின் தெரியவந்துள்ளதால் போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என்ற 38 வயது பார்வை தெரியாத மாற்றுத்திறனாளி நபர் அடிக்கடி பேருந்துகளில் செல்வார். பேருந்தில் தன்னுடைய பக்கத்தில் உட்கார்ந்து இருப்பவர்களிடம் அன்பாக பேசி அவர்களிடம் செல்போன் நம்பர்களை வாங்கிக் கொள்வார். பின்னர் அவர்களுடன் அடிக்கடி இனிமையாக பேசுவதோடு அவர்களுடைய வீட்டுக்கே சென்று அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து அந்த உதவிக்கு அவர் பணம் பெற்றுக் கொண்டு வந்திருக்கின்றார். இதுபோல சுமார் 50 பேர்களிடம் ரூபாய் 50 லட்சத்துக்கும் மேலாக மோசடி செய்திருப்பதாக தெரிகிறது

மேலும் மோசடி செய்த பணத்தை வைத்து பல பெண்களை திருமணம் செய்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததாகும் பல பெண்கள் தனக்கு கள்ளக்காதலிகளாக இருப்பதாகவும் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சமீபத்தில் அவர் அசரப் அலி என்ற இன்ஜினியரிங் படித்த ஒரு பட்டதாரியை ஏமாற்றி பணம் பறித்த விஷயத்தில்தான் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசாரிடம் டேவிட் சிக்கிக்கொண்டார். மாற்றுத்திறனாளி ஒருவர் லட்சக்கணக்கில் மோசடி செய்து பல பெண்களிடம் உல்லாசமாக இருந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment