நரைமுடி இருந்தா என்ன? அப்படியே மணமேடை ஏறிய பிரபல நடிகரின் மகள்!

  • IndiaGlitz, [Saturday,December 18 2021]

பிரபல பாலிவுட் நடிகர் திலீப் ஜோஷியின் மகள் நியாதியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணத்தின்போது மணமகள் நரைத்த முடியுடன் மேடையேறி இருக்கிறார். இவரது எளிமை மற்றும் வலிமையான செயலை நெட்டிசன்கள் தற்போது பாராட்டி வருகின்றனர்.

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் திலீப் ஜோஷி பல்வேறு இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். அவருடைய மகள் நியாதி தனது நீண்டகால காதலரான யசோவர்ந்தன் மிஸ்ராவை சமீபத்தில் கரம்பிடித்துள்ளார். மேலும் இந்த திருமணத்தின்போது நியாதி செய்த ஒரு காரியம்தான் தற்போது நெட்டிசன்களை வியக்க வைத்திருக்கிறது.

நடிகர் திலீப் ஜோஷி மகள் நியாதி தனது திருமணத்திற்காக மேக்கப் போட்டிருக்கிறார். ஆனால் ஏறக்குறைய முழுவதும் நரைத்திருக்கும் தனது தலைமுடியை கலர் செய்யாமல் விட்டு விட்டார். இந்த எளிமையை பார்த்துத்தான் தற்போது நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கும் ஒரு தைரிய வேண்டும் என நியாதியை பாராட்டி வருகின்றனர்.

மணப்பெண் என்றாலே நாள்கணக்கில் மேக்கப் போட்டுக்கொண்டு முடியை அலங்காரம் செய்துகொள்ளும் இந்த நவீன யுகத்தில் தன்னிடம் இருப்பதை மறைக்காமல் நியாதி செய்த காரியம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.

More News

பிரபல கவிஞர் எழுதிய கதையில் நடிகை ஐஸ்வர்யா ராய்… வைரல் தகவல்!

பாலிவுட் சினிமாவில் உருவாக இருக்கும் 3 ஹீரோயின்களை மையப்படுத்திய திரைப்படம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராய் இணைந்து

திருமணம் முடிந்த கையோடு கணவனுக்காக அல்வா செய்த பிரபல நடிகை!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வரும்வரும் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கௌஷால் இவர்களது திருமணம்

மக்கள் ஜாதகத்தையே மாத்தி எழுதியிருவாங்க: பிக்பாஸ் கமல்ஹாசன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று 76வது நாளாக நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய முதல் புரோமோவில் கமல் தோன்றும் காட்சியின் புரோமோ விடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

சோகத்திலும் சக வீரர்களிடம் சேட்டை செய்து விளையாடிய கேப்டன்… வைரல் புகைப்படம்!

3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியக் கிரிக்கெட் அணி வீரர்கள் தென்ஆப்பிரிக்கா

உயிரைக் காப்பாற்றிய டிராபிக் போலீஸ்க்கு நன்றி தெரிவித்த சச்சின்…நடந்தது என்ன?

இந்தியக் கிரிக்கெட்டில் ஜாம்பவனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்,