நள்ளிரவில் ஹீரோ அழைத்து போகவில்லையெனில் படத்தில் இருந்து தூக்கி விடுவார்கள்: 'தசாவதாரம்' நடிகை..!

  • IndiaGlitz, [Sunday,February 18 2024]

நள்ளிரவு 3 மணிக்கு ஹீரோ அழைத்தால் கூட அவரது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றும், இல்லையென்றால் அடுத்த நாளே என்னை படத்திலிருந்து தூக்கி விடுவார்கள் என்றும், கமல்ஹாசன் நடித்த ‘தசாவதாரம்’ படத்தில் நடித்த நடிகை சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திரை உலகை பொருத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது என்று பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘தசாவதாரம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை மல்லிகா ஷெராவத் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஹீரோக்களை அட்ஜெஸ்ட் செய்யவில்லை என்றால் உடனே படத்திலிருந்து தூக்கி விடுவார்கள் என்றும் குறிப்பாக ஒரு ஹீரோ நள்ளிரவு 3 மணிக்கு என்னை அவருடைய வீட்டுக்கு அழைத்தாலும் நான் போக வேண்டும், இல்லையென்றால் அடுத்த நாளே நான் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டு விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மோசமான செயல் என்னை வெகுவாக பாதித்தது என்றும் நான் ஹீரோக்களுடன் சமரசம் செய்யவில்லை என்பதால் எனக்கு நிறைய படங்கள் கைவிட்டு போனது என்றும் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த 65 படங்களில் நான் ஹீரோக்களுடன் ஒத்துழைக்கவில்லை என்பதால் நான் நீக்கப்பட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தன்னை நள்ளிரவில் அழைத்த ஹீரோ யார் என்பதை அவர் வெளியில் சொல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் யூகித்து சில பெயர்களை பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

விமான பயணத்தின் போது திடீரென ஏற்பட்ட ஆபத்து.. உயிர் தப்பியது இப்படித்தான்: ராஷ்மிகாவின் புகைப்படம்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் விமான பயணம் செய்த போது திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும் அப்போது தான் செய்த செயல் குறித்த புகைப்படத்தை அவர் தனது  சமூக வலைதளத்தில்

பட்டாசு இல்லை, அழைப்பிதழ் கூட இல்லை.. பசுமைத் திருமணம் செய்யும் 'இந்தியன் 2' நடிகை..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த வரும் 'இந்தியன் 2' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகை வரும் 21ஆம் தேதி திருமணம் செய்ய இருக்கும் நிலையில் இந்த திருமணம் சுற்றுச்சூழலுக்கு

திமுக கூட்டணியில் கமல்ஹாசன் கட்சி இல்லையா? தேசிய கட்சியுடன் கூட்டணி என தகவல்..!

வரும் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அக்கட்சி தேசிய கட்சியுடன்

சன்னிலியோனுக்கு ஹால் டிக்கெட் அனுப்பிய உபி அரசு.. என்ன தேர்வு எழுத போகிறார்?

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு காவலர் தேர்வு எழுத உத்தர பிரதேச மாநில அரசு ஹால் டிக்கெட் அனுப்பி உள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் கட்சியின் பெயர் மாற்றம்.. புதிய கட்சி பெயரில் முக்கிய அறிவிப்பு..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தளபதி விஜய் 'தமிழக வெற்றி கழகம் 'என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் பெயரில் 'க்' வர வேண்டும் என்று பலர் அறிவுறுத்திய நிலையில்