ஹவுஸ்புல் ஆன 'தர்பார்' திரைப்படம்: 'பாபா' முத்திரையை பதிவு செய்த தேசிங்கு பெரியசாமி!

  • IndiaGlitz, [Sunday,July 18 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ‘தர்பார்’ திரைப்படம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசானது. இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ‘தர்பார்’ திரைப்படம் ஜப்பான் மொழியில் ஜப்பானில் ரிலீசாகிறது

ஜப்பானில் ஏற்கனவே ரஜினி ரசிகர்கள் மிக அதிகம் இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ‘தர்பார்’ படத்தின் முன்பதிவு தொடங்கிய நிலையில் இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரையில் அனைத்து திரையரங்கிலும் ‘தர்பார்’ படத்துக்கான டிக்கெட் ஹவுஸ்புல் ஆகி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இந்த தகவலுக்கு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி பாபா முத்திரையை பதிவு செய்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தான் இயக்க இருப்பதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே இயக்கிய ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் அவருக்கு டெலிபோன் மூலம் வாழ்த்து தெரிவித்தார் என்பது தெரிந்தது.

More News

அஜித் ஓட்டிய பைக்கை விற்று தான் வாடகை கட்டினேன்: தமிழ் நடிகர் பேட்டி

அஜித் நடித்த 'தீனா' படத்தில் அவர் ஓட்டிய பைக்கை விற்று தான் வாடகை கட்டினேன் என தமிழ் நடிகர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்

விஜய் - கார்த்தி சந்திப்பின்போது என்ன நடந்தது?

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதாகவும் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாக்கப்பட்டு

தனுஷின் புதிய சாதனை: தமிழ் சினிமா ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளினார்

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவரான தனுஷ் தமிழ் சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை செய்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

அண்டை மாநிலங்களில் திறக்கப்பட்ட திரையரங்குகள்: தமிழகத்தில் எப்போது?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படாததால் பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளன என்பதும்

சூர்யா-ஜோதிகாவை அடுத்து தடுப்பூசி போட்டு கொண்ட மற்றொரு நட்சத்திர தம்பதி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்து கொண்டே வருகிறது. இருப்பினும் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் மூன்றாம் அலை தோன்ற வாய்ப்பு இருப்பதால்